என் வெள்ளைக்காரி பத்தினி
இது என்ன விடயம் என்று ஆராய்வதை விட இதைப்பற்றி கிண்டலும் கேலியும் செய்த காலப்பகுதியே என்னைப்பொறுத்தவரை அதிகம் என்று கூறலாம்.உண்மையில் இது என்ன? இதற்கு ஏதாவது விதிகள் உள்ளனவா? வாசித்தால் நன்றாக இருந்தால் மட்டும் இதனை அங்கீகரித்துவிடலாமா?அப்படியானால் கட்டுரை,சிறுகதை மற்றும் இதர சுவாரஸ்ய பதிவுகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்ற பல சந்தேகங்களை வைத்துக்கொண்டுதான் இதனை ஏற்றுக்கொள்ளாமல் ஏறிமிதித்தோம்.
எனது சந்தேகத்துக்கு முதல் உங்களுக்கு என்னைப்பற்றி பெரும் சந்தேகம் வந்திருக்குமே.நான் இந்த கவிதை கவிதை என்று எல்லாரும் சொல்லீனமே அதைப்பற்றித்தான் கதைக்கிறன்.
பாடசாலை நாட்களில் இதுதொடர்பில் எனக்கு பெரிய ஆர்வம் இருந்ததாக சொல்லமாட்டேன்.நண்பர்கள் மத்தியில் நான் ஒரு இலக்கிய கர்த்தா என்று காண்பித்துக்கொள்வதற்காக நான் கையில் தூக்கிக்கொண்ட ஆயுதம்தான் இந்த கவிதை.இதில் பெரிய நகைச்சுவை என்னென்றால் அவர்கள் எனக்களித்த ஆக்கமும் ஊக்கமும்கூட நான் தெரிவுசெய்த ஆயுதம் போன்றதே.
அப்போது எமக்கு சமய பாடம் கற்பித்தவர் ச.வே.பஞ்சாட்சரம்.என்னைப்பொறுத்தவரை,நானறியாது யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக பாரதியை புரட்சிக்கவி என்று வழிமொழிவதைவிட,ச.வே.தான் நான் கண்ட புரட்சிக்கவி.அப்படியொரு உணர்வாளன்.பேச்சிலும் மூச்சிலும் ஆத்மார்த்தமாக இன விடுதலையில் வேட்கையை வெளிப்படுத்திய கவிஞன்.எமக்கு பாடம் கற்பிக்கும் வேளையில்கூட பெரும்பாலான நேரம் இனவிடுதலைப்பாடல்களை சொல்லி ரசிக்கவைப்பார்.
என்னதான் இருந்தாலும் பரீட்சை நெருங்கும் சமயத்தில் பாடத்தை விட்டு அவர் கவனம் சிதறாது.ஆனால்,அந்த நேரத்திலும் பாடத்தை கடத்துவதற்காக எமது வகுப்பினர் எடுத்த ஆயுதம்தான் “சேர் தெய்வீகன் புதுசா கவிதை எழுதியிருக்கிறார்” என்ற கோஸத்தின் ஊடான ஊக்கம்.இப்படிச்சொன்னால்,குழந்தை பிறந்துவிட்டது.வந்துபார்க்கலாம் என்ற தாதியின் குரலை கேட்ட தகப்பன் போல ச.வே.என்னருகில் ஓடி வந்து எனது கவிதையை பார்த்து மகிழ்ந்து அதில் திருத்தங்களை சொல்வார்.அந்த அளவளாவல் முடிய பாடநேரமும் முடியும் என்பது எமது வகுப்பினரின் அசைக்கமுடியாத நம்பிக்கை.அதில் அவர்கள் என்றுமே தோற்றதில்லை.இந்த வகையில் கிடைத்ததுதான் இவர்களது ஆக்கமும் ஊக்கமும்.
நானும் விடவில்லை.ஏதேதோ எல்லாம் கிறுக்குவேன்.அப்போதெல்லாம்,எதுகை மோனை சரிவந்தால் என்னைப்பொறுத்தவரை அதுதான் கவிதை.எனக்கும் ஏதோ யாருமே செய்யாததை நான் செய்கிறேன் என்று உள்ளுக்குள் ஒரு உறுமல்.போதாக்குறைக்கு,அக்காலப்பகுதியில்,நாவலர் வீதியிலிருந்து வெளியாக நங்கூரம் வார சஞ்சிகையில் நான் அனுப்பிய கவிதைக்கு முதல் பரிசும் தந்துவிட்டார்கள்.பிறகென்ன எனது வகுப்பில் நானொரு குட்டி ச.வே.(இப்பொழுதெல்லாம் அதை நினைக்க ஒருபக்கம் சிரிப்பும் மறுபக்கம் ஆத்திரமும்தான் வருகிறது.அப்படி என்னதான் எழுதினேன் என்று நினைக்கையில்தான் அந்த ஆத்திரம்.)
பின்னர்,கவிஞர்(?) தெய்வீகனை மையமாக வைத்து யாழ்ப்பாணத்தில் உள்ள மற்ற கவிஞர்களை மெல்ல பார்த்தேன்.உதயனின் சகோதர பத்திரிகையான சஞ்சீவியில் வரும் கவிதைகளை படித்தேன்.த.ஜெயசீலன்,தட்சாயிணி,வவுனியா ரமேஸ்,வாயுபுத்திரன்,சிறீ பிரசாந்தன்,தயாநிதி,மணிமாறன் போன்றவர்களின் கவிதைகளை பார்த்தபோதுதான் தெரிந்தது நாங்கள் எழுதியதுகளின் சீத்துவம்.(இதில் பெரிய இடி என்னென்றால் சிறீ பிரசாந்தன்,தயாநிதி,மணிமாறன்,த.ஜெயசீலன்,வாயுபுத்திரன் எனப்படும் குருபரன் ஆகியோர் எனது கல்லுரியை சேர்ந்தவர்கள்.அவர்கள் எல்லாம் கவிதையில் மரபு யாப்பு எனக்கற்று எழுதுபவர்கள்.அவர்களது கவிதைகள் அன்றாட விடயங்களை கருப்பொருளாகக்கொண்டு தேவார பாணியில் இருக்கும். ஆவர்களது படைப்புக்களை வாசிக்கும்போது அட நாமும் இப்படி எழுதக்கூடாதா என்று தோன்றும்.அக்காலப்பகுதியில்தான் கவிதை ஆர்வம் கருக்கட்டியது.
ஏன்னடா இது.நான் எழுதிய கன்னி எழுத்துக்களுக்கு சரியோ தவறோ அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.அதேவேளை நான் பின்பற்றும் அந்த கவிதை துறையில் எனக்கு தெரியாத விடயங்களும் உள்ளன என்பதை பார்த்தபோது கவிதைக்குள்ளும் வேறொரு உலகம் உள்ளதை உணரமுடிந்தது.அது எத்துணை சிரமமானது என்பதும் தெரிந்தது.
இந்தத்தேடலில் பரவியிருந்தபோதுதான் எனது நண்பர்கள் வட்டாரத்தில் அதிகம் பேசாத ஜேனாவின் அறிமுகமும் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளும் வரப்பிரசாதமாக அமைந்தன.
ஜேனாவை பற்றிப்பேசிக்கொண்டே இருக்கலாம்.அவ்வளவுக்கு அவன் ஒரு நடமாடும் நுலகம்.(அவனது திறமைகளில் ஆச்சரியப்படத்தக்கது கண்களை திறந்து கொண்டே மகாதேவா சேரின் இரசாயனவியல் பாடத்தில் நித்திரைகொள்வது என்பது வேறுவிடயம்)கிட்டத்தட்ட எனது சிநேகிதர்கள் சுதன்,குணாளன்,தயா,விசாகன் போன்றவன்.என்ன,கவிதை என்ற விடயத்தில் இவன் எப்பொழுதும் வித்தியாசமாக தெரிந்தான்.நடைமுறை சம்பவங்களை நகைச்சுவையாக நக்கலாக கவி புனைவதில் கில்லாடி.அக்காலப்பகுதியில் பாடசாலையில் தினமும் பிரார்த்தனை கூட்டத்தின் பிறகு நடைபெறும் 15 நிமிட மாணவர் நேரத்தில் குருபரனுக்கும் ஜேனாவுக்கும் நடக்கும் கவிதை சமர் எமது வகுப்புக்களின் மத்தியில் பிரபலம்.அவனது கவிதைகள் மரபை பின்பற்றியிருக்கவில்லை.யாப்புக்குள் அகப்பட்டிருக்கவில்லை.ஆனால் மனதில் தோன்றியதை தேக்கிவைத்திருக்காது வெளிப்படுத்தும் கவிஞனின் அடிப்படை அம்சத்துக்கு கட்டுப்பட்டிருந்தது.அதேவேளை,சுவாரஸ்யமாக இருந்தது,கைதட்டல்களை வாங்கியது.
புதுவையின் கவிதைகளை வாசித்தபின்னர்தான் தெரிந்தது.ஜேனாவின் கவி நடையும் அதை ஒத்ததாக இருந்தது.
உடனே எனக்கு மரபிலிருந்த நாட்டம் அற்றுப்போயிற்று.நான் நினைத்ததை நாலு பேர் விளங்குமளவுக்கு என்னால் முடிந்த மொழியில் கூறத்தெரியுமானால் பிறகு ஏன்,சிரமமான ஒரு வழியில் சென்று அதனை சாதிக்க தலைப்படவேண்டும் என்ற குறுக்கு சிந்தனை வந்தது.
அன்று முதல் மரபு கவிதை புதுக்கவிதை என்று வரும்போது மரபுக்கவிதைக்கு நல்ல வாசகனாகவும் புதுக்கவிதைக்கு சொந்தக்காரனாகவும் இருக்க ஆர்வம் கொண்டேன்.இன்றும் இருந்துகொண்டிருக்கிறேன்.
மரபின் முக்கியத்துவம் தேவை என்று இன்றும் நான் உணரவில்லை.
எனக்கு பிடித்த வெள்ளைக்காரி பத்தினி என்று தெரிந்தால் பிறகு ஏன் ஊரில் கட்டுப்பாட்டுடன் வளர்ந்த மாமன்மகள்?
எனது சந்தேகத்துக்கு முதல் உங்களுக்கு என்னைப்பற்றி பெரும் சந்தேகம் வந்திருக்குமே.நான் இந்த கவிதை கவிதை என்று எல்லாரும் சொல்லீனமே அதைப்பற்றித்தான் கதைக்கிறன்.
பாடசாலை நாட்களில் இதுதொடர்பில் எனக்கு பெரிய ஆர்வம் இருந்ததாக சொல்லமாட்டேன்.நண்பர்கள் மத்தியில் நான் ஒரு இலக்கிய கர்த்தா என்று காண்பித்துக்கொள்வதற்காக நான் கையில் தூக்கிக்கொண்ட ஆயுதம்தான் இந்த கவிதை.இதில் பெரிய நகைச்சுவை என்னென்றால் அவர்கள் எனக்களித்த ஆக்கமும் ஊக்கமும்கூட நான் தெரிவுசெய்த ஆயுதம் போன்றதே.
அப்போது எமக்கு சமய பாடம் கற்பித்தவர் ச.வே.பஞ்சாட்சரம்.என்னைப்பொறுத்தவரை,நானறியாது யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக பாரதியை புரட்சிக்கவி என்று வழிமொழிவதைவிட,ச.வே.தான் நான் கண்ட புரட்சிக்கவி.அப்படியொரு உணர்வாளன்.பேச்சிலும் மூச்சிலும் ஆத்மார்த்தமாக இன விடுதலையில் வேட்கையை வெளிப்படுத்திய கவிஞன்.எமக்கு பாடம் கற்பிக்கும் வேளையில்கூட பெரும்பாலான நேரம் இனவிடுதலைப்பாடல்களை சொல்லி ரசிக்கவைப்பார்.
என்னதான் இருந்தாலும் பரீட்சை நெருங்கும் சமயத்தில் பாடத்தை விட்டு அவர் கவனம் சிதறாது.ஆனால்,அந்த நேரத்திலும் பாடத்தை கடத்துவதற்காக எமது வகுப்பினர் எடுத்த ஆயுதம்தான் “சேர் தெய்வீகன் புதுசா கவிதை எழுதியிருக்கிறார்” என்ற கோஸத்தின் ஊடான ஊக்கம்.இப்படிச்சொன்னால்,குழந்தை பிறந்துவிட்டது.வந்துபார்க்கலாம் என்ற தாதியின் குரலை கேட்ட தகப்பன் போல ச.வே.என்னருகில் ஓடி வந்து எனது கவிதையை பார்த்து மகிழ்ந்து அதில் திருத்தங்களை சொல்வார்.அந்த அளவளாவல் முடிய பாடநேரமும் முடியும் என்பது எமது வகுப்பினரின் அசைக்கமுடியாத நம்பிக்கை.அதில் அவர்கள் என்றுமே தோற்றதில்லை.இந்த வகையில் கிடைத்ததுதான் இவர்களது ஆக்கமும் ஊக்கமும்.
நானும் விடவில்லை.ஏதேதோ எல்லாம் கிறுக்குவேன்.அப்போதெல்லாம்,எதுகை மோனை சரிவந்தால் என்னைப்பொறுத்தவரை அதுதான் கவிதை.எனக்கும் ஏதோ யாருமே செய்யாததை நான் செய்கிறேன் என்று உள்ளுக்குள் ஒரு உறுமல்.போதாக்குறைக்கு,அக்காலப்பகுதியில்,நாவலர் வீதியிலிருந்து வெளியாக நங்கூரம் வார சஞ்சிகையில் நான் அனுப்பிய கவிதைக்கு முதல் பரிசும் தந்துவிட்டார்கள்.பிறகென்ன எனது வகுப்பில் நானொரு குட்டி ச.வே.(இப்பொழுதெல்லாம் அதை நினைக்க ஒருபக்கம் சிரிப்பும் மறுபக்கம் ஆத்திரமும்தான் வருகிறது.அப்படி என்னதான் எழுதினேன் என்று நினைக்கையில்தான் அந்த ஆத்திரம்.)
பின்னர்,கவிஞர்(?) தெய்வீகனை மையமாக வைத்து யாழ்ப்பாணத்தில் உள்ள மற்ற கவிஞர்களை மெல்ல பார்த்தேன்.உதயனின் சகோதர பத்திரிகையான சஞ்சீவியில் வரும் கவிதைகளை படித்தேன்.த.ஜெயசீலன்,தட்சாயிணி,வவுனியா ரமேஸ்,வாயுபுத்திரன்,சிறீ பிரசாந்தன்,தயாநிதி,மணிமாறன் போன்றவர்களின் கவிதைகளை பார்த்தபோதுதான் தெரிந்தது நாங்கள் எழுதியதுகளின் சீத்துவம்.(இதில் பெரிய இடி என்னென்றால் சிறீ பிரசாந்தன்,தயாநிதி,மணிமாறன்,த.ஜெயசீலன்,வாயுபுத்திரன் எனப்படும் குருபரன் ஆகியோர் எனது கல்லுரியை சேர்ந்தவர்கள்.அவர்கள் எல்லாம் கவிதையில் மரபு யாப்பு எனக்கற்று எழுதுபவர்கள்.அவர்களது கவிதைகள் அன்றாட விடயங்களை கருப்பொருளாகக்கொண்டு தேவார பாணியில் இருக்கும். ஆவர்களது படைப்புக்களை வாசிக்கும்போது அட நாமும் இப்படி எழுதக்கூடாதா என்று தோன்றும்.அக்காலப்பகுதியில்தான் கவிதை ஆர்வம் கருக்கட்டியது.
ஏன்னடா இது.நான் எழுதிய கன்னி எழுத்துக்களுக்கு சரியோ தவறோ அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.அதேவேளை நான் பின்பற்றும் அந்த கவிதை துறையில் எனக்கு தெரியாத விடயங்களும் உள்ளன என்பதை பார்த்தபோது கவிதைக்குள்ளும் வேறொரு உலகம் உள்ளதை உணரமுடிந்தது.அது எத்துணை சிரமமானது என்பதும் தெரிந்தது.
இந்தத்தேடலில் பரவியிருந்தபோதுதான் எனது நண்பர்கள் வட்டாரத்தில் அதிகம் பேசாத ஜேனாவின் அறிமுகமும் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளும் வரப்பிரசாதமாக அமைந்தன.
ஜேனாவை பற்றிப்பேசிக்கொண்டே இருக்கலாம்.அவ்வளவுக்கு அவன் ஒரு நடமாடும் நுலகம்.(அவனது திறமைகளில் ஆச்சரியப்படத்தக்கது கண்களை திறந்து கொண்டே மகாதேவா சேரின் இரசாயனவியல் பாடத்தில் நித்திரைகொள்வது என்பது வேறுவிடயம்)கிட்டத்தட்ட எனது சிநேகிதர்கள் சுதன்,குணாளன்,தயா,விசாகன் போன்றவன்.என்ன,கவிதை என்ற விடயத்தில் இவன் எப்பொழுதும் வித்தியாசமாக தெரிந்தான்.நடைமுறை சம்பவங்களை நகைச்சுவையாக நக்கலாக கவி புனைவதில் கில்லாடி.அக்காலப்பகுதியில் பாடசாலையில் தினமும் பிரார்த்தனை கூட்டத்தின் பிறகு நடைபெறும் 15 நிமிட மாணவர் நேரத்தில் குருபரனுக்கும் ஜேனாவுக்கும் நடக்கும் கவிதை சமர் எமது வகுப்புக்களின் மத்தியில் பிரபலம்.அவனது கவிதைகள் மரபை பின்பற்றியிருக்கவில்லை.யாப்புக்குள் அகப்பட்டிருக்கவில்லை.ஆனால் மனதில் தோன்றியதை தேக்கிவைத்திருக்காது வெளிப்படுத்தும் கவிஞனின் அடிப்படை அம்சத்துக்கு கட்டுப்பட்டிருந்தது.அதேவேளை,சுவாரஸ்யமாக இருந்தது,கைதட்டல்களை வாங்கியது.
புதுவையின் கவிதைகளை வாசித்தபின்னர்தான் தெரிந்தது.ஜேனாவின் கவி நடையும் அதை ஒத்ததாக இருந்தது.
உடனே எனக்கு மரபிலிருந்த நாட்டம் அற்றுப்போயிற்று.நான் நினைத்ததை நாலு பேர் விளங்குமளவுக்கு என்னால் முடிந்த மொழியில் கூறத்தெரியுமானால் பிறகு ஏன்,சிரமமான ஒரு வழியில் சென்று அதனை சாதிக்க தலைப்படவேண்டும் என்ற குறுக்கு சிந்தனை வந்தது.
அன்று முதல் மரபு கவிதை புதுக்கவிதை என்று வரும்போது மரபுக்கவிதைக்கு நல்ல வாசகனாகவும் புதுக்கவிதைக்கு சொந்தக்காரனாகவும் இருக்க ஆர்வம் கொண்டேன்.இன்றும் இருந்துகொண்டிருக்கிறேன்.
மரபின் முக்கியத்துவம் தேவை என்று இன்றும் நான் உணரவில்லை.
எனக்கு பிடித்த வெள்ளைக்காரி பத்தினி என்று தெரிந்தால் பிறகு ஏன் ஊரில் கட்டுப்பாட்டுடன் வளர்ந்த மாமன்மகள்?
