<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-11052470</id><updated>2012-02-16T23:28:42.345+10:00</updated><category term='அனுபவம்'/><category term='எதிர்வினை'/><category term='கட்டுரைகள்'/><category term='கவிதை'/><category term='விமர்சனம்'/><title type='text'>அலையோசை</title><subtitle type='html'>ஆழ்மனத்தின் ஓசைகளை அள்ளியிறைத்திட
ஆசையாய் அமைத்த வலை.                          
இதன் ஓசை      
அலையோசை.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>26</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-6857200699677555342</id><published>2010-07-28T16:43:00.001+10:00</published><updated>2010-07-28T16:58:39.514+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>உச்சக்குளிரில் ஒரு உச்சாடனம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_M94eRSBTQOw/TE_U--S2CPI/AAAAAAAAAC4/__CivwygDzE/s1600/foggy_tree.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 217px;" src="http://3.bp.blogspot.com/_M94eRSBTQOw/TE_U--S2CPI/AAAAAAAAAC4/__CivwygDzE/s320/foggy_tree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498847848381679858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காற்றை கிழித்துக்கொண்டு சீறி பழகிய என் கார்&lt;br /&gt;முதல் தடவையாக&lt;br /&gt;மண்ணில் விழுந்து கிடந்த &lt;br /&gt;கார் முகிலை விலக்கிக்கொண்டு பறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வைகறை பனி இன்று&lt;br /&gt;வரலாற்றை உடைத்து உறைநிலையில் உள்ளதாய்&lt;br /&gt;இந்த குளிரிலும் குரல் பிசகாத &lt;br /&gt;வானொலி மாமா சொல்லிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொலித்தீன் பைகளால் சுற்றிக்கட்டிய&lt;br /&gt;மின் வண்டுகள் போல தெரிந்த&lt;br /&gt;வீதிவிளக்குகள் தன்னால் இயன்ற தூரத்துக்கு&lt;br /&gt;வெளிச்சத்தை உந்திக்கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பிரார்த்தனை மண்டபத்தில் &lt;br /&gt;வகுப்பாசிரியருக்கு அஞ்சி அகவணக்கம் செலுத்தும்&lt;br /&gt;மாணவர்களை போல அசைவற்று&lt;br /&gt;உறைந்து நின்ற மரங்களில் பனி ஒழுகிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கே மரங்களிலிருந்து சருகுகளில் வீழ்ந்து&lt;br /&gt;தம் சுயத்தை தொலைத்து&lt;br /&gt;தற்கொலை செய்துகொள்ளும்&lt;br /&gt;பனித்துளிகளின் இறுதி ஓசைகள் கேட்டவண்ணமே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்துகள் வந்துவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்புடன்&lt;br /&gt;அநியாயத்துக்கு இடைவெளிவிட்டு&lt;br /&gt;ஊர்ந்து சென்ற சில கார்களினால்&lt;br /&gt;வீதிகள் ஓரளவுக்கு அவ்வப்போது நிரம்பியிருப்பதாக தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா உணர்வுகளையும் போலியாக மறந்து&lt;br /&gt;போர்வைகளுக்குள் தமது &lt;br /&gt;கடைசி சொட்டு கனவுகளை கழிப்பதில்&lt;br /&gt;மனிதங்கள் தீவிரமாகிக்கிடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னிரவின் காமம் &lt;br /&gt;இறுகிய அணைப்புக்களில் இளைப்பாறி கிடந்தது &lt;br /&gt;இரவின் உடலை பகல் &lt;br /&gt;மென்மையாக விழுங்கிக்கொண்டிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;எனது கார் தொடர்ந்து பனியை கிழித்துக்கொண்டு&lt;br /&gt;பயணித்துக்கொண்டிருந்தது&lt;br /&gt;இக்கவிதையை மனதில் கோர்த்தபடி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-6857200699677555342?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/6857200699677555342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=6857200699677555342' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/6857200699677555342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/6857200699677555342'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2010/07/blog-post_28.html' title='உச்சக்குளிரில் ஒரு உச்சாடனம்!'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_M94eRSBTQOw/TE_U--S2CPI/AAAAAAAAAC4/__CivwygDzE/s72-c/foggy_tree.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-4197633031770956006</id><published>2010-07-27T02:31:00.000+10:00</published><updated>2010-07-27T02:32:32.554+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எதிர்வினை'/><title type='text'>வலியுறுத்துவதில் ஒழிந்திருக்கும் வலிமிகுந்த செய்தி</title><content type='html'>அருண்மொழிவர்மன் அவர்கட்கு,&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இருவருக்கும் இடையிலான விவாதத்தில் நான் கூறிய கருத்துக்கள் ஒற்றப்படையான விவாதத்துக்குள் மட்டும் நின்றுகொள்ளும் காரணத்தினால் இனிமேலும் இது விடயத்தில் வாதம் புரிவதில்லை என்பதை உங்களது இறுதி ஆக்கத்தில் தெரிவித்திருந்தீர்கள். எங்களது வாதத்தில் அவரோகணத்தை ஆராதிக்கும் புள்ளியை நானும் ஆமோதித்து அதற்கு முன்னர் எனது கருத்தினை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களது முதல் ஆக்கத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் விடும் தவறுகள், ஊடகங்கள் ஈழப் பிரச்சனையை வணிக நோக்கில் அணுகுவது, மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிடுவது, புலி எதிர்ப்பையே மாற்றுக் கருத்து என்ற அர்த்தத்தில் ஏற்றுக் கொள்வது என்ற விடயங்களை முற்றாக ஏற்றுக்கொள்கிறேன். அதில் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, ஈழத்தமிழர்களது எதிர்காலப்போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் பாதையில், விடுதலைப்புலிகள் இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் என்ற உங்களது கருத்தினை, ஆழமாக நோக்கும்போது அதில் என்னால் உடன்படமுடியாத கூற்றினையே இப்போதும் நான் கூறவிரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஆயுதவழிப்போராட்டம் ஒன்றே சிங்களத்தீவின் ஆட்சியாளர்களிடமிருந்து தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான வழிவகையாக அமைந்திருந்தது. இப்போதும்கூட, சிங்களதேசத்தின் நடவடிக்கைகள் அவர்களுடனான சமரசத்துக்கோ சமாதான வழிமுறைக்கோ சாதகமாக உள்ளதா, அவ்வாறெனில் இதற்கு இறுதிவழிதான் என்ன என்பவற்றை ஆழமாக நோக்கும்போது இதற்கு புலிகள்தான் சரி என்று புலி எதிர்ப்பார்களுக்கும் அசரீரி கேட்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே விடுதலைப்புலிகள் பயணித்த பாதையே தமிழர்களின் உரிமை போராட்ட வெற்றிக்கு சரியானது என்று இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னரும் வரலாறு கூறத்தான் போகிறது. அதில் எனக்கு இருநூறு வீத நம்பிக்கை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறான ஒரு நிலையில், விடுதலைப்புலிகள் விட்ட தவறுகளை திருத்துகிறோம் என்று கூறிக்கொண்டு தமிழர்களின் உர்மைக்காக போராடும் எதிர்கால அமைப்பு ஏதாவதற்கு "திருத்தப்பட்ட விடுதலைப்புலிகள்" என்ற பிழையான கருத்துருவாக்கத்தை கொடுத்தவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். பிழைகளே விடாத தமிழர் விடுதலை அமைப்பு ஒன்று தமிழர் உரிமையை பெற்றுத்தந்தது என்ற எதிர்கால வரலாற்றை ஏழுத முடியுமானால் அதற்கு ஏற்றவாறான ஒரு அமைப்பையோ களத்தையோ அல்லது அதற்கு ஏற்ற விமர்சனத்தையோ முன்வைத்து உங்களது பணிகளை மேற்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், முப்பது வருடங்களாக ஒரு இனத்தின் உரிமைக்காக தன்னை வரித்துக்கொண்ட இயக்கம் இன்று அழித்தொழிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விட்ட பிழைகளை திருத்தி சரியான வழியில் அடுத்தகட்ட போராட்டத்தை மேற்கொள்வோம் என்று சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்வதெல்லாம் அந்த அமைப்பை அசிங்கப்படுத்தும் செயல். &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஆயிரம் கெட்ட காரியங்களும் ஐந்து நல்ல காரியங்களும் செய்தது என்றுகொண்டும் அல்லது அந்த ஆயிரம் நல்ல காரியங்களையும் ஐந்து கெட்ட காரியங்களையும் செய்தார்கள். ஆனால் அந்த ஐந்து கெட்ட காரியங்களும் அந்த ஆயிரம் நல்ல காரியங்களையும் கெடுத்துவிட்டன என்றும் எடுகோள்களுடனும் உள்ளவர்கள் ஏன் அந்த அமைப்பு விட்ட தவறுகளை திருத்தி இனி புதிய பாதையில் பயணிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் அவர்களைவிட நற்பாதையில் பயணித்த வேறேதாவது அமைப்பையோ அல்லது இப்போதும் தமிழ்மக்களின் கொள்கைகளுக்கும் ஏற்றவாறாக உள்ள அமைப்பையோ பிடித்து அவை இழைத்த தவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தை தொடராலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிடுத்து, எதிர்கால சந்ததிக்கு வரலாறாக அமையப்போகும் ஒரு அமைப்பை திருத்தினோம் திருத்தினோம் என்று கூறிக்கொண்டு, அந்த அமைப்பு தவறுவிட்டது தவறுவி்ட்டது என்ற கருத்தினையே ஆழ வலியுறுத்தும் வலி மிகுந்த முயற்சி வேண்டாம் அருண்மொழிவர்மன். அது வரலாற்றுக்கு தவறாக இடுகின்ற அத்திபாரம். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் புலிகளால் ஆகாதது இனி ஒருவராலும் செய்யப்படக்கூடாது என்றெல்லாம் வரட்டுப்பிடிவாதம் பிடிக்கவில்லை. அது நடந்தால், அந்த மகிழ்வை துயிலுமில்லங்களில் உறங்கும் அந்த தெய்வங்களுடன் இணைந்து மகிழ்வுடன் கொண்டாடும்போது இப்படியொரு வழியில் தீர்வை எடுத்திருக்கலாமே என்று அந்த கல்லறைகளை கட்டியணைத்து அழுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-4197633031770956006?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/4197633031770956006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=4197633031770956006' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/4197633031770956006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/4197633031770956006'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2010/07/blog-post_27.html' title='வலியுறுத்துவதில் ஒழிந்திருக்கும் வலிமிகுந்த செய்தி'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-3712721739731885979</id><published>2010-07-22T19:11:00.004+10:00</published><updated>2010-07-22T19:21:34.785+10:00</updated><title type='text'>தமிழருக்காக யாராவது போராட்டம் தொடங்க போகிறாரா?</title><content type='html'>விடுதலைப்புலிகள் தமது போராட்ட காலத்தில் இழைத்த பிழைகளை மூடிமுறைக்காது அவற்றின் மீது பகிரங்கமான விமர்சனத்தை முன்வைப்பதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி தமிழ்மக்கள் ஆரோக்கியமாக நகரலாம் என்பது குறித்து அருண்மொழிவர்மன் எழுதிய பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பான எனது எதிர்வினைக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். இது மாதிரியான விவாதக்களங்கள் மக்களை புரிதல் நிலைக்கு அழைத்து செல்லும் என்ற அவரது விருப்பத்துக்கு இணங்க, அவரது பதிலுக்கு எனது எதிர்வினையை இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அருண்மொழிவர்மன் தனது எதிர்வினையில் குறிப்பிட்ட விடயங்களை சுருக்கமாக இங்கு தந்தால் - &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;* போராட்டத்தின் தலைமையை புலிகள் வகித்திருந்தாலும் அனைத்து இன்னல்களையும் மக்களுமே சேர்த்து அனுபவித்தனர்.  எனவே நடந்தது நடப்பது, நடக்கப்போவது என்று ஒவ்வொரு விடயத்திலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஈழப் பிரச்சனையின் ஒருவர் என்ன நிலை எடுத்து நிற்கிறார் என்பதை விட அவர் எதற்காக, எந்தெந்தக் காரணிகளுக்காக அந்த நிலையை எடுத்து நிற்கிறார் என்பதில் அவதானமாக இருகக்வேண்டும்.  அதை விடுத்து பூம் பூம் மாடுகளை எல்லாம் பார்த்து பரவசப்பட்டதால் தான் கடந்த மே 2009ற்குப் பின்னர் யார் யார்  துரோகம் செய்தார்கள் என்ற பட்டியல் இன்னமும் இன்னமும் அதிகம் நம்பியவர்கள் பெயர்களை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்தபடி இருக்கின்றது&lt;br /&gt;&lt;br /&gt;* போராட்டம் ஒன்றின் மூல உத்தி (strategy), தந்திர உத்தி (tactics) என்ற கருத்துக்களில் மூலவுத்தி என்பது விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு தெளிவுடன் அணுகப்படவேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;* அத்தனை பேரும் இறப்பது என்கிற லட்சியவாத அணுகுமுறை எல்லாம் மக்களுக்கான போராட்டத்திற்கு எத்தனை தூரம் சரிவரும் அல்லது நியாயமானதாகும் என்று நினைத்துப் பார்த்தீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற கருத்துக்களின் அடிப்படையில் அவரது விளக்கம் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து எனது கேள்வி ஒன்றே ஒன்றுதான். அதாவது, லட்சியத்துக்கான சத்திய வேள்வியாக புலிகள் மேற்கொண்ட போராட்டம் மிகப்பெரியதொரு சதியின் வழியால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. சரி, இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்கவேண்டும் என்றும் மக்களுக்கு இனியாவது விழிப்புநிலை வரவேண்டும் என்றும் எது சரி எது நியாயம் என்பதில் இனியாவது தெளிவு வேண்டும் என்றும் தொடர் விமர்சனங்களை மேற்கொள்வதில் யாருக்கு என்ன பயன் கிட்டப்போகிறது. அல்லது இதுவரையில் யாருக்கு கிட்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்காக இன்னொரு போராட்டம் ஆரம்பமாகப்போகிறது என்ற நிச்சயம் இருந்தால், நீங்கள் முன்வைத்த வாதங்களின் மூலம் போராட்டம் தொடர்பில் அறிவார்ந்த வாதங்களை மேற்கொண்டு, புலிகள் முன்புவிட்ட சரி பிழைகளை சீர்தூக்கி பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்காக அப்படியான போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு யாராவது தயாராக இருந்தால் அவருக்கு ஆலோசனையாக இந்த திருத்தப்பட்ட தீர்ப்புக்களை கூறலாம்.( ஏனெனில் அவர் புலிகளை போலில்லாமல் மற்றையவர்களின் ஆலோசனையை கேட்கவேண்டுமல்லவா) &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எழுத்துக்களில் கூறும் மனக்கிடக்கைகளுக்கு நீதியான உருவம் வழங்கவேண்டும் என்று பார்த்தால் மேற்கூறியவையாக மட்டுமே இருக்கமுடியும். இல்லாவிடின், தனியே விமர்சனம் செய்கிறோம் பேர்வழிக்குள் நின்றுகொண்டு, தமிழர் போராட்ட வரலாற்றை ஆய்கிறோம் என்று கூறினால், அதன் நோக்கம் பதிவுலகில் சில நூறு பின்னூட்டங்களை பெறுவதற்கும் அல்லது அந்த விமர்சன கொத்துக்களை புத்தகமாக வெளியிட்டு பணம் சம்பாதித்துக்கொள்ளவதற்காகவுமே இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இனி நீங்கள் முன்வைத்த கருத்துக்களுக்கான எதிர்வினைக்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்தின் தலைமை புலிகளாக இருந்தாலும் பாதிக்கப்பட்டது மக்களும் சேர்த்துத்தான் என்பது உண்மை. இதனை மக்கள் இறுதிவரை ஏற்றுக்கொண்டுதான் புலிகளுடனேயே இருந்தார்கள். அவ்வாறான பிணைப்புடன் இருந்தவர்கள் 40 ஆயிரம் பேரை கொன்றுவிட்டு, புலிகளுடன் இருந்த காரணத்தினால்தான் அவர்கள் இறந்தார்கள் என்று பழியை புலிகள் தலையில் போட்டால், இதற்கு புலிகளால் என்ன நடவடிக்கை எடுத்திருக்கமுடியும்? காதலுடன் வாழ்ந்தவந்தவனின் மனைவியை கொன்றுவிட்டு, பழியை கணவன் மீது சுமத்திவிட்டு, அவனை முதலே பிரிந்து வந்திருந்தால், அவளுக்கு இப்படி நடத்திருக்காது என்று நீலிக்கண்ணீர் வடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் போராட்டம் இராணுவ போராட்டமாக அமைந்திருந்தபோதும் மூல உத்தியை விவாதத்துக்கு உட்படுத்தாமல் அவர்கள் போரிட்டிருக்கவேண்டும். ஆனால், கசப்பான உண்மை யாதெனில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தபோது - நீங்கள் கூறியதைப்போன்று - அவர்கள் தமது மூல உத்தியை விவாதப்பொருளாக்கி ஏனையோரின் ஆலோசனைகளையும் செவிமடுத்ததினால்தான், அவர்களுக்கு இந்த முடிவு ஏற்பட்டது. இல்லாவிட்டால், இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் கெரில்லா போர்வைக்குள் சென்றிருக்கக்கூடும். புலிகள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்பதில்லை என்று கூறும் நீங்கள் இதனை ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, இறுதிப்போரில் நடந்தது இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் புலிகளுக்கு வக்காளத்து வாங்குவதால் உமக்கு என்ன லாபம் என்று நீங்கள் கேட்கலாம். கடந்த பதிவில் கூறியதையே நான் மீண்டும் சொல்கிறேன். நீதியும் வீரமும் நிறைந்த தமிழர்களது மூன்று தசாப்தகால வரலாற்றில் கறை பதித்துவிடாதீர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு தமிழர்களின் வீரத்தை பறை சாற்றும் அடையாளம், புலிகளது போராட்ட காலம். அதனை ஒரு தோப்பாக பாராது மரமாக பார்த்தால், உங்களைவிட அதிக பிழைகளை என்னால் கண்டுபிடிக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், வெறிபிடித்த தும்பிகளாக நாலாபக்கமும் ஓடி ஓடி புலிகள் விட்ட பிழைகளை பட்டியல்படுத்தி, அதனை நோண்டி திரிந்தால் எதிர்கால சந்ததிக்கு தமிழர்களின் போராட்டம் தொடர்பில் தவறான விளம்பரம் ஒன்றை பதிவு செய்து செல்ல வேண்டியே வரும். ஒரு தமிழனாக அதனை நாம் செய்யலாமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-3712721739731885979?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/3712721739731885979/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=3712721739731885979' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/3712721739731885979'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/3712721739731885979'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2010/07/blog-post_5036.html' title='தமிழருக்காக யாராவது போராட்டம் தொடங்க போகிறாரா?'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-2305217147842188733</id><published>2010-07-22T01:58:00.003+10:00</published><updated>2010-07-22T11:57:50.869+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எதிர்வினை'/><title type='text'>புலிகளின் கடந்தகாலத்தை நாம் திருத்தவேண்டுமா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_M94eRSBTQOw/TEcayw-ubMI/AAAAAAAAACw/skUxO_czD_8/s1600/black_tigers_day_20080706002.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 199px;" src="http://3.bp.blogspot.com/_M94eRSBTQOw/TEcayw-ubMI/AAAAAAAAACw/skUxO_czD_8/s320/black_tigers_day_20080706002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5496391329672752322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"தமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்டத்தின் பாதையில் யாருடைய சொல்லையும் கேட்கவில்லை. அதனால்தான், இவ்வாறான வரலாற்று அழிவு இன்று தமிழ்மக்களுக்கு ஏற்பட்டது. அதன்விளைவாக இன்று தமிழர் தாயகத்தையும் தமிழ்மக்களையும் சிங்களவர்களிடம் புலிகளே தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள்" - என்றதொரு கருத்துருவாக்கம் போருக்கு பின்னைய இன்றைய காலகட்டத்தில் தாராளமய எதிர்வினையாக பல்வேறு தளத்தில் பகிரப்பட்டுவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலம், தமிழர்களின் இருப்பின் மேல் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு ஆகிய தளங்களின் மீது நின்று தற்கால நிகழ்வுகளை அசைபோடும் சிலரும், "அன்றைக்கே சொன்னோம் நாம் இதெல்லாம் நடக்கும் என்று" - என்று விசிலடிச்சான் குஞ்சுகளாக விடுதலைப்புலிகளை விமர்சிக்கிறோம் என்றுகொண்டு அவலை என்று நினைத்து உரலை இடிக்கும் பலரும் - சிதைந்துபோன தமிழர்கள் படையையும் அவர்களின் போராட்ட அணுகுமுறைகளையும் மேற்கண்ட விமர்சனத்திற்குள் அடக்கிவருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான விமர்சனத்தை முன்வைப்பவர்களில், இரண்டாம் வகையினரின் பிரசார இயந்திரம் முன்னரை விட 2009 மே மாதத்துக்கு பின்னர் முழுநேரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதாவது, தென்னாபிரிக்க ஒக்டோபஸ் போல தாம் கூறியது போலவே - எவரையும் செவிமடுக்காத புலிகள் தோற்றுவிட்டார்கள் என்று கூறுவதில் இந்த வகையினர் சதா ஆத்ம திருப்தி அடைந்துகொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையாறாக்களுக்கு ஒரு சிறு விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்து முடிந்த போர் எனப்படுவது சர்வதேசமும் ஒருங்குசேர கங்கணம் கட்டி நின்று நடத்திமுடித்த ஒன்றாகும். இதில் விடுதலைப்புலிகள் எவரது ஆலோசனையை கேட்டாலும், அந்த படை அழிக்கப்படவேண்டும் என்பதில் வல்லரசுகள் முழு முடிவோடு நின்றன. அதற்கு காரணம், தமிழ்மக்களுக்கான விடிவு என்ற விடயத்தில் எவருக்கும் விட்டுக்கொடுக்காத கொள்கை பிடிப்பும் விடுதலைப்புலிகள் அமைப்பு தென்னாசிய அரசியல் சக்கரத்தின் அச்சாணியாக மாறியிருந்த நிலையும் ஆகும். இன்னொருபுறம், அவர்களது போராட்டம் நியாயமானதொன்று என்ற உண்மைநிலை உலகளாவிய ரீதியிலும் உணரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறானதொரு சூழ்நிலையில், வன்முறைக்கு பதில் வன்முறை என்ற சமன்பாட்டின்கீழ புலிகள் நடத்திய நியாயமான போரை சர்வதேசத்தினால் ஜீரணிக்கமுடியவில்லை. இந்த ஒட்டுமொத்த நிலைமையின் விளைவு எதுவென்று கேட்டால், அது உலகநாடுகள் புலிகளின் மீது அச்சம் கொண்டதாகும். அந்த அச்சத்தின் வெளிப்பாடே புலிகளின் மீது இவ்வாறு வரிசையில் நின்று சர்வதேசமும் போரிட்டு அழித்தமைக்கு முதலும் முழுமையானதுமான காரணமும் ஆகும். எதற்குமே வலுவற்ற - பெயரளவு - அமைப்பு என்று புலிகளை பார்த்து உலகம் நினைத்திருந்தால், அதனை சிங்களமே பார்த்துக்கொள்ளட்டும் என்றுவிட்டு உலகம் தன்பாட்டுக்கு இருந்திருக்கும். ஆனால், சூழ்ச்சியிலே இயங்கும் உலகின் கதவுகளை நீதிக்கைகளினால் தட்டியதன் விளைவுதான் புலிகளுக்கு ஏற்பட்ட இந்த அழிவுக்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான ஒரு அழிவு ஏற்படாத வண்ணமிருக்க எவரால் ஆலோசனை கூறியிருக்கமுடியும்? புலிகள் தமது ஆலோசனையை கேட்டிருக்கலாம், கேட்டிருக்கலாம் என்று இப்போது ஆளுக்காள் சொல்வதெல்லாம், சிங்களதேசமும் சர்வதேசமும் போட்ட எலும்புத்துண்டை புலிகள் கவ்வியிருக்கலாம் என்று கூறும் ஆலோசனைகளே தவிர, தமிழர்களின் அபிலாஷைகளை புலிகள் போராடியதை விட மாற்றுவழியில் சென்று பெற்றுக்கொள்ள முன்மொழியப்பட்ட ஆலோசனைகள் அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;இல்லை, தமிழர்களின் முழுமையான அபிலாஷைகளை புலிகளை போல் அல்லாது வேறுவழியில் சென்று இலகுவாக பெற்றுக்கொண்டிருக்கமுடியும் என்று கூறும் அந்த ஆஸ்தான ஆலோசகர்கள், சிந்தனை சிற்பிகள் இப்போது தாராளமாக தமது கொள்கைகளை முன்வைக்கலாமே? புலிகளின் ஆளுமை இல்லாத இன்றைய நிலையில் - அவர்கள்கூறும் அந்த புலி அச்சம் இல்லாமல் - தாரளமாக தமிழர்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;துரோகிகள் என்று புலிகள் தம்மை நிந்தித்தார்கள் என்று கூறுபவர்கள் யார்? சுப்பிரமணிசுவாமியா? சோவா? அல்லது சோபா சக்தியா? சிறீரங்கன், ரியாகரன் போன்றவர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் அடிப்படைகளையே ஏற்றுக்கொள்ளாது சிங்களத்திடம் அடிபணியுமாறு ஆலோசனை கூறியவர்களும் சாதீயத்துக்கு புலிகளிடம் என்ன தீர்வு இருக்கிறது என்று வெற்று வார்த்தைகளில் விமர்சனம் பேசியவர்களும்தான் இவர்கள். இவர்கள் தமிழர்களை சிங்களவர்களிடம் கூட்டி கொடுக்க முயன்றது மட்டுமல்லாமல், சாதீயம் பேசி தமிழர்களின் மத்தியில் பிளவுகளை மேலும் அதிகரிக்க முயற்சித்தவர்களும் ஆவர். பிரதேசவாதம் பேசி தான் புலிகள் அமைப்பினால் துரத்தப்பட்டமைக்கு சப்பைக்கட்டு கட்டிய கருணாவுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதில் எவருக்காவது வேறு கருத்து இருந்தால் கூறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் உரிமைக்கான இராணுவ போராட்டம் ஒன்றை பகிரங்க விவாதத்துக்கு உட்படுத்த முடியாது என்பதுகூட தெரியாது, விமர்சனம் - விளக்கம் - விவாதம் என்ற தொனிகளில் புலிகளுக்கு பதிலறிக்கை விடுத்தவர்களின் தற்போதைய குறைந்த பட்ச சாதனை என்ன? இனிமேல், அவர்களின் அதிக பட்ச சாதனை எதுவாக இருக்கும்? &lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் தோல்வி அடைந்தமைக்கான காரணத்தை புலிகள் ஆராய்ந்து அறிந்து, இனிவரும் காலங்களில் அவற்றை தவிர்க்க வேண்டும் என்று விண்ணப்பமிடும் விற்பனர்களுக்கு உறுதியான வரிகளாக இதனை கூறிக்கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, விடுதலைப்புலிகளின் போராட்டத்தை பொறுத்தளவில் அவர்கள் இறுதிக்கணம்வரை நடந்துவந்த பாதை மிகச்சரியானதொன்றே. வன்முறைக்கு வன்முறை என்ற பதில்முறையில் போராடினார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களையும் பாதுகாக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தார்கள். தமது ஆற்றலுக்கு அப்பால் நடந்த போரிலிருந்து மக்களை காப்பாற்றுமாறு சர்வதேசத்தை இறைஞ்சினார்கள். எந்த கணத்திலும் தமது கொள்கையை விட்டுக்கொடுக்காது இறுதி மூச்சுவரை போராடினார்கள். தமது மக்களின் உரிமையை வேண்டி எந்த மண்ணிலிருந்து போராடினார்களோ, அந்த மண்ணிலேயே தமது இறுதி மூச்சையும் விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட, வரைவிலக்கணமான ஒரு உரிமை போராட்டத்தை இந்த உலகுக்கு தமிழினம் இனி தரமுடியாது. இதில் எங்கும் பிழையும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, புலிகள் கடந்த காலத்தில் விட்ட பிழைகளை திருத்துகிறோம் என்று கூறிக்கொண்டு, நீதியும் வீரமும் நிறைந்த தமிழர்களது மூன்று தசாப்தகால வரலாற்றில் கறை பதித்துவிடாதீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-2305217147842188733?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/2305217147842188733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=2305217147842188733' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/2305217147842188733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/2305217147842188733'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2010/07/blog-post_22.html' title='புலிகளின் கடந்தகாலத்தை நாம் திருத்தவேண்டுமா?'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_M94eRSBTQOw/TEcayw-ubMI/AAAAAAAAACw/skUxO_czD_8/s72-c/black_tigers_day_20080706002.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-8939503341609503528</id><published>2010-07-19T00:28:00.002+10:00</published><updated>2010-07-19T00:34:14.973+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>குறும்படம் என்ற திரைமொழி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_M94eRSBTQOw/TEMP2bsT5eI/AAAAAAAAACo/SQFWx4U8c0A/s1600/shortfilms-21.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 189px;" src="http://2.bp.blogspot.com/_M94eRSBTQOw/TEMP2bsT5eI/AAAAAAAAACo/SQFWx4U8c0A/s320/shortfilms-21.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5495253398143100386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திரைமொழி என்பது விசாலமானது. அதன் தாக்கம் அதை விட வீரியமானது. உயிருள்ள மற்றும் உயிரற்ற சகல விடயங்களையும் ரசிக்கவைக்கும் தகைமை திரைமொழிக்கு இருக்கிறது. அந்தவகையில், திரைப்படங்கள் என்ற வகையினுள் அடங்கும் முழு நீள சித்திரங்கள் பல்வேறு கருப்பொருட்களின் விம்பங்களாக மக்கள் மனங்களை ஆட்கொண்டுவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திரைமொழிகளின் வடிவங்களும் காலத்துக்கு காலம் புதிய பரிமாணங்களின் ஊடாக தனது தாக்கங்களை மாற்றியமைத்திருக்கிறது. அந்த வகையில் 1910 களில் வட அமெரிக்க நாடுகளின் திரைவடிவங்களின் ஊடக பிரசவிக்கப்பட்டதுதான "குறும்படம்" என்ற புதிய மொழி. இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் கதைகளை கூறும் படைப்புக்களாக திரைப்படம் என்ற கலைவடிவம் மக்கள் மனங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் குறும்படம் என்ற புதிய திரைமொழி குறுகிய நேரத்தில் ஒரு செய்தியையோ தகவலையோ மக்களின் மனங்களில் ஆழப்பதிந்துவிடும் வல்லமை கொண்டவையாக உருவெடுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 20 நிமிடங்களிலிருந்து 40 நிமிடங்களுக்குள் எடுக்கப்படும் படங்கள் குறும்படம் என்ற வரைவிலக்கணத்திற்குள் அடங்குவதாக ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க திரைப்பட இயக்குனர்களின் ஆரம்பகால தெரிவிப்புக்கள் காணப்பட்டபோதும் அக்காலப்பகுதியில் நியூஸிலாந்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஒரு நிமிடத்துக்கு கூடுதலாகவும் 15 நிமிடங்களுக்கு உட்பட்டதாகவும் இருந்தால் அவை குறும்படங்கள் என்ற தகுதியை பெற்றுவிடுவதாக அமைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;குறும்படங்கள் படைக்கப்பட்ட ஆரம்ப காலப்பகுதியில் ஒவ்வொரு விதமான வரைவிலக்கணங்கள் காணப்பட்டபோதிலும் அதன் வளர்ச்சியின் பாதையில், குறும்படங்களுக்கு இடையிலான திறன்சார் நிகழ்வுகளில் அவற்றை ஒழுங்கு செய்யும் திரைத்துறை நிறுவனங்கள் வரையறுத்து விதிகளுக்குள் குறும்படங்கள் எடுக்கப்பட்டபோது, அந்த பொதுவிதிகளுக்கு மதிப்பளித்த குறும்படங்கள் நேரத்தன்மையை தாமே எழுதிக்கொள்ளும் வல்லமையை பெற்றுக்கொண்டு, எதிர்கால குறும்படங்களுக்கும் அவை அளவுகோல்களாக மாற்றம்கொண்டுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தவகையில், பாரிஸில் அமைந்துள்ள சர்வதேச மிகக்குறுகிய படங்களுக்கான அமைப்பு ஒரு நிமிடமும் அதிலும் குறைவாகவும் எடுக்கப்பட்ட படங்களுக்கான நிகழ்வினை நடத்திவருகிறது. அதேபோன்று போன்று பிலிம் மினிட் என்ற அமைப்பு 2006 ஆம் ஆண்டு முதல் ஒருநிமிட திரைப்படங்களின் நிகழ்வு என்ற விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம், குறும்படங்களின் தரத்தை உயர்த்துவது மாத்திரமன்றி, அது குறித்த ஆர்வம் கொண்டு இயக்குனர்களையும் பெரிய அளிவில் ஊக்குவித்தும் வருகிறது. இப்படியான, அளவுகோல்களுக்கு எதிராக தங்களது திரைத்திறனை முன்வைக்க முயற்சி செய்யும் இயக்குனர்கள், எவ்வளவுக்கு எவ்வளவு குறுகிய நேரத்தில் எவ்வளவு பெரிய செய்தியை தாக்கத்தை ஏற்படுத்தும்வகையில் ரசிகர்களிடம் எடுத்துச்செல்லலாம் என்ற பாதையின் ஊடாக தங்கள் பரிசோதனைகளை அமைத்துக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் எடுக்கப்பட்ட பல குறும்படங்கள் சர்வதேச திரை விழாக்கள் வரை போட்டிக்கு சென்று தமது ஆற்றலையும் தகுதியையும் பறைசாற்றியிருக்கின்றன. மாதம் ஒன்றில் பல நூற்றுக்கணக்கான தமிழ் குறும்படங்கள் உலகெங்கும் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகள் மட்டும் அல்லாமல் யப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்துகூட வெளிவந்துகொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் குறும்படங்கள் பல்வேறு கதைக்களங்களை தொட்டுச்சென்றுள்ளபோதிலும் தமிழீழத்தை மையமாக வைத்து வெளிவந்த பல குறும்படங்கள் உலகின் பல்வேறு மூலையிலுமுள்ள தமிழர்களுக்கு பலவிதமான உணர்வுகளை சுமந்த செல்லும் அபார ஊடகமாக விளங்கியவண்ணமுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக ஈழத்தமிழர்களின் போராட்ட இலக்கியத்தை உலகளாவிய ரீதியில் செறிவினை பெறுவதற்கு நிதர்சனம் தொலைக்காட்சி பல்வேறு குறும்படங்களை தயாரித்திருக்கிறது. கவிதை, கதை போன்ற களங்களுக்கு அப்பால் காணாலி ஊடாக ஈழத்தமிழர்களின் பல்வேறு கனதியான உணர்வுகளை அனுபவங்களாகவும் செய்திகளாகவும் அவலங்களாகவும் இந்த குறும்படங்கள் மொழிபெயர்த்திருக்கின்றன. இந்த குறும்படங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் வரலாறாக பதிவுசெய்யக்கூடிய ஆழமான உணர்வுகளை தன்னகத்தே கொண்டவையாக உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்திலிருந்து வெளியான குறும்படங்களில் தமிழர் தாயகத்தின் சிறந்த படைப்பாளியும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உரமூட்டியவருமான அளவெட்டியைச் சேர்ந்த ஞானரதன் என அழைக்கப்படும் வை.சச்சிதானந்தம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. ஈழமண் இன்றும் போற்றும் மாமனிதர் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழ்நிலையில், குறும்படங்களுக்கு பல தமிழ் அமைப்புக்கள் களம் அமைத்து கொடுத்து படைப்பாளிகளுக்கு செயலூக்கமளித்து அவர்களுக்கு கரம் கொடுத்து வருகின்றன. உலகெங்கும் பல தமிழ் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களும்கூட குறும்படங்களுக்கு சிறந்த பாதையை வகுத்தளித்து அதனை ஒரு புதிய திரைமொழியாகவும் புதிய வழியிலான ஊடகமாகவும் உருவாக்கிவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில், கலைஞர் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக தொகுத்தளிக்கப்பட்ட நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் குறும்படங்களுக்கான போட்டி ஒன்று இடம்பெற்றது. தரமான குறுபடங்கள் பல அந்த நிகழ்வில் வெளியாகின. உணர்வுபூர்வமான கதையம்சம் கொண்ட படங்கள் நகைச்சுவை உணர்வுமிக்க படங்கள் புனைகதைகளை அடிப்படையாக கொண்ட படங்கள் சமூகத்திற்கான நல்ல செய்தியை வெளிக்கொண்டுவந்த படங்கள் உண்மைக்கதைகளை தளமாக கொண்ட படங்கள் ஆகிய பல குறும்படங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டு போட்டியிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் குறிப்பிட்டதை போல நேர வரையறையை நிபந்தனையாக கொள்ளப்பட்ட இந்த போட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட படங்கள் அனைத்து ஐந்து முதல் எட்டு நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டவையாக காண்பிக்கப்பட்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில், சரித்திர கதை ஒன்றை அடிப்படையாக கொண்டு சூரிய பிரதாப் என்பவரால் எடுக்கப்பட்ட "சுயம்பு" என்ற குறும்படம் எனக்கு பிடித்ததாக அமைந்திருந்தது. சரித்திரத்தை திரைமொழிக்கு கொண்டுவரும்போது அதனை மூன்று மணிநேரத்தில் திறம்பட காட்சிப்படுத்தி அதில் சொல்லவந்த - சொல்லவேண்டிய - விடயத்தை இயக்குவதே மிகக்கடினமான ஒரு பணியாக இருக்கும்போது - &lt;br /&gt;&lt;br /&gt;சரித்திர கதை ஒன்றினை குறும்படம் என்ற திரைமொழியினுள் அழகாக அடக்கி நல்லதொரு செய்தியை நேர்த்தியாக வழங்கியிருந்ததை இயக்குனரின் அசகாய முயற்சியும் அற்புதமான ஆற்றலும் என்று கூறலாம். புரட்சி என்பது அதன் நியாயமான கோரிக்கையை நிவர்த்தி செய்யப்படாமல் ஒழித்துவிட முடியாது என்ற செய்தியை, 15 ஆம் நூற்றாண்டில் சிம்மகிரிக்கோட்டம் என்ற குறுநிலத்தை ஆட்சி புரியும் கொடுங்கோல் மன்னன் விஜய காலிங்க மன்னனை எதிர்த்து போராடிய வீரத்தமிழன் சுயம்புத்தேவனின் கதையின் ஊடாக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறும்படத்துக்குரிய சகல விதிகளுக்கும் கட்டுப்பட்ட அல்லது அதன் ஊடாக முற்றுமுழுதாக திறமையாக எடுக்கப்பட்ட படம் என்று கூற முடியாவிட்டாலும் கூட, சரித்திரகதை ஒன்றினை குறைந்த வளங்களுடன் நேர்த்தியாக சொல்லியுள்ள அந்த திறன் மெச்சற்குரியது. &lt;br /&gt;&lt;br /&gt;போராட்ட இலக்கியம் என்பது உணர்வுகளினால் உந்தப்பட்ட ஒரு அற்புத கலைவடிவம். அதனை செயற்கையாக யாரும் உருவாக்கிவிட முடியாது. அது ஒரு இனத்தின் வலிகளினாலும் வடுக்கள் நிறைந்த அனுபவத்தினாலும் பொங்கி பிரவாகப்படுபவை. உலகிலே பிறந்த பல போராட்ட இலக்கியங்கள் இலக்கிய பரப்புக்கு பல தலைசிறந்த படைப்பாளிகளை பிற்காலத்தில் வழங்கியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில், ஈழத்தின் போராட்ட இலக்கியம் வடிவெடுக்கவெடுத்து அதனை அடுத்தடுத்த தலைமுறையினர் படிக்கும்போது தமிழர்களின் வீரம் செறிந்த வரலாற்றினை அந்த படைப்புக்கள் உணர்வுடன் பிரதிபலிக்கவேண்டும். ஒரு போராட்ட இலக்கியத்தை படைக்குமளவுக்கு தமிழினத்திடமிருக்கு உணர்வுகள் அனைத்தும் அக்கினிக்குழம்புகள் எனலாம். அந்த உணர்வு தீப்பந்தங்களுக்கு குறும்படங்கள் போன்ற ஊடகங்களும் மார்க்கங்களாக அமையவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-8939503341609503528?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/8939503341609503528/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=8939503341609503528' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/8939503341609503528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/8939503341609503528'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2010/07/blog-post_19.html' title='குறும்படம் என்ற திரைமொழி'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_M94eRSBTQOw/TEMP2bsT5eI/AAAAAAAAACo/SQFWx4U8c0A/s72-c/shortfilms-21.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-1225324669226849187</id><published>2010-07-15T15:49:00.008+10:00</published><updated>2010-07-16T05:58:30.162+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எதிர்வினை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>"நீயா நானா" வில் இடம்பெற்ற கசப்பான பொருட்குறிப்பு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_M94eRSBTQOw/TD60LcDKD1I/AAAAAAAAABo/4mMDQ9CTV40/s1600/vijay.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 210px;" src="http://4.bp.blogspot.com/_M94eRSBTQOw/TD60LcDKD1I/AAAAAAAAABo/4mMDQ9CTV40/s320/vijay.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494026704039579474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் ஒளிபரப்புக்களத்துக்கு விஜய் டி.வி. நிகழ்ச்சிகள் இன்று புதிய பரிமாணத்தை வழங்கியிருக்கின்றன என்றால் மிகையில்லை. நேர்த்தியான பல நிகழ்ச்சிகளை ஜனரஞ்சக ரசனையுடன் மக்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொகுத்தளித்து அந்த ஊடகம் தனது முயற்சியில் பெருவெற்றியீட்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில், சண் டி.வி.யில் ஒளிபரப்பாகிய 'விசுவின் அரட்டை அரங்கம்' ஒன்றே தமிழ் ஒளிபரப்புத்துறையில் மக்கள் விவாத அரங்குக்கான வரைவிலக்கணம் என்ற நிலை காணப்பட்டிருந்தபோது, விஜய் டி.வியின் நீயா நானா என்ற நிகழ்வு மக்கள் மத்தியில் பெருவரவேற்பை பெற்ற சிந்தனை உற்றாக வந்திறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பாளர் கோபிநாத்தின் அசகாயப் பேச்சாற்றலினாலும் திறன் மிக்க விவாத ஆற்றலினாலும் அந்த நிகழ்ச்சி கடல் கடந்த நாடுகளிலும் தமிழ்மக்கள் மத்தியில் விருப்பத்திற்குரிய ஒன்றாக பரந்து விரிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறான ஒரு நிகழ்ச்சியில் அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் நெஞ்சை நெருடும் விடயமாகியிருக்கிறது. இது தொடர்பாக விஜய் டி.வி.க்கு நான் அனுப்பிய கடிதத்தினை கீழே தருகிறேன். அந்த கடிதம் இது பற்றி விரிவாக பேசும். இந்த கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லை. அதேவேளை, அடுத்தடுத்த 'நீயா நானா' நிகழ்ச்சிகளிலும் இது குறித்து எதிர்வினையை காணோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;அன்புடன் கோபிநாத் அவர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி தொகுப்பாளர் "நீயா நானா"&lt;br /&gt;விஜய் டி.வி.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதம் - ஜுலை - நான்காம் திகதி நடைபெற்ற உங்களது நிகழ்ச்சியில் தாய் - மகன் பந்தம் குறித்த உணர்வுபூர்வமான வாதப்பொருளை திறமையாக கையாண்டிருந்தீர்கள். பாசத்தின் வெளிப்பாட்டை தத்ரூபமாக வெளிக்கொண்டுவந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், உங்களது வாதப்பொருளுக்கு ஆதாரமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் குறித்த கருத்து ஒன்றை முன்வைத்திருந்தீர்களர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;"விடுதலைப்புலிகளை பற்றி ஆய்வு செய்த ஒரு ஆஸ்திரேலிய பெண், அவர்களுடைய தற்கொலை படையில் யாரெல்லாம் உடனடியாக சேருகிறார்கள் என்றால், தங்களது தலைச்சன் பிள்ளைகளை போரில் பறிகொடுத்தவர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்..சிங்களவர்களது தாக்குதல்களால், இலங்கை இராணுத்தினரின் தாக்குதல்களால் யாரெல்லாம் தனது மூத்த மகன்களை பறிகொடுத்தார்களோ, அவர்களெல்லாம் உடனடியாக தற்கொலை படையினராக மாறுகிறார்கள். காரணம் அவ்வளவு பெரிய இழப்பு. அவ்வளவுக்கு ஒரு பையன் - அம்மா உறவு மகத்தானது என்று அந்த ஆய்வில் குறிப்பிடுகிறார்."&lt;br /&gt;&lt;br /&gt;என்று தெரிவித்திருந்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ கரும்புலிகள் தினமாகிய இன்று ஜுலை 5 ஆம் திகதி நீயா நானா நிகழ்ச்சியில் இந்த கருத்தை நீங்கள் கூறியதும், அது ஆழ்ந்த துயரை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியில் நீங்கள் கூறிய விடயத்தை உங்களது கருத்தாக முன்வைக்கவில்லை, அன்றைய நிகழ்ச்சியும் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றிய விவாத அரங்கு இல்லை அதேவேளை நீங்களும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கோ அல்லது தமிழ்மக்களின் போராட்டத்துக்கோ எதிரானவர் அல்ல என்பவற்றையெல்லாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை -&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலை படையில் இணைந்துகொண்டவர்கள், தலைச்சன் பிள்ளையை போரில் பறிகொடுத்தவர்களே என்று உங்களால் மேற்கோள் காட்டப்பட்ட அந்த கருத்து முற்று முழுதாக நிராகரிக்கப்படவேண்டியது என்பதை இங்கு கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் கூறப்பட்ட கருத்து, தலைச்சன் பிள்ளையை போரில் பறிகொடுத்தவர்கள்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் என்று அந்த ஆஸ்திரேலிய பெண்மணியின் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளார் என்பது போன்ற வெளிப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் தற்கொலை படையானது தமிழர்களின் போராட்ட வடிவத்தில் உயிராயுதம் என்று வர்ணிக்கப்பட்ட உன்னத வடிவமாகும். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத தியாகமும் இனவாத அரசிடமிருந்து தமது மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு ஒரு இனம் தன்னுடன் வரித்துக்கொண்ட உறுதியான  கவசமும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனை பயங்கரவாதம் என்றும் தீவிரவாதம் என்றும் ஒற்றை சொற்களுக்குள் உலகம் வரைவிலக்கணப்படுத்திக்கொண்டாலும்கூட தமது கொள்கைக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை ஆகுதியாக வார்த்துக்கொண்ட ஒரு இனத்தின் விடுதலை வேட்கையையும் அவர்களது ஓயாத விடுதலை பயணத்தையும் உலகப்பொதுவிதிகளுக்குள் அடக்கி மாசுபடுத்த முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினரில் இணைந்துகொண்டவர்கள் நீங்கள் கூறியதை போல சிங்கள அரசின் அடக்குமுறையின் உச்ச வலியினால் போராட்டத்தை நோக்கி உந்தப்பட்டவர்களர் ஆவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சாவின் கணத்தை முன்னமே தெரிந்துகொண்டு போரில் சென்று தம்மை அர்ப்பணித்த மாவீரர்கள் யாவரும், நீங்கள் கூறியதைப்போன்று சிங்களப்படைகளின் உச்ச அடக்குமுறையின் வலியை தமது உடலின் ஒவ்வொரு நாளங்களிரும் சுமந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- பெற்ற தாயை, சகோதரியை தம் கண்முன் சீரழித்த சிங்கள படைகளின் கொடூரத்துக்கு எதிராக புறப்பட்ட இளைஞர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- குடும்பத்தையே கூண்டோடு வெட்டி சாய்த்த சிங்கள காடையர்களின் பயங்கரவாதத்துக்கு எதிராக புறப்பட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஆண்டாண்டு காலமாக தன் சொந்த நிலத்தில் குடியிருக்க வழியின்றி வாழ்வையே தொலைத்த விரக்திக்கு எதிராக புறப்பட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஆயிரம் ஆயிரம் உணர்வுகளின் உச்ச வெளிப்பாடாக ஈழத்தமிழினம் வெகுண்டெழுந்து உருவாக்கிய படைதான் இந்த தற்கொலைப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உணர்வுகளையும் அவர்களது தியாகங்களையும் அந்த உன்னதமானவர்களின் இலக்கினையும் கொச்சைப்படுத்துவதாக, அவர்களின் சாதனைகள் அரங்கேறிய காலத்தில் வாழந்துகொண்டுடிருக்கும் நாங்களே எந்த கருத்தினையும் முன்வைப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும், ஒரு தமிழனாக, இந்த விடயத்தில் ஆழமான புரிதல் இன்றி விமர்சனங்களை மிகப்பலமான ஊடகத்தில் முன்வைப்பது முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஊடக உலகில் பொதுமக்கள் கருத்துக்களை ஜனரஞ்சக ரசனை சொட்ட அருமையாகவும் அறிவுபூர்வமாக வெளியாகும் ஒரு நிகழ்ச்சிகளுக்கு மகுடம் வைத்தாற் போல் இடம்பெற்றுவருவது விஜய் டி.வியின் நீயா நானா. நீங்கள் கூறும் கருத்துக்கள் அடுத்த நிமிடமே உலகின் எந்த மூலையிலும் உள்ள தமிழனுக்கு சென்றடைந்துவிடுகிறது. அவ்வாறான ஆழமான - அர்த்தபுஷ்டியான - விவாதக்களம் நீயா நானா.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறான ஒரு நிகழ்வில், உண்மைக்கு புறம்பான அல்லது அதனை பிழையாக நீங்கள் விளங்கிக்கொண்ட கருத்தை முழுமையாக ஆய்வு செய்யாமல் முன்வைத்தமை ஈழத்தமிழன் ஒவ்வொருவனையும் ஆழ்ந்த வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனை கருத்திற்கொண்டு இனிவரும் காலங்களில், ஈழத்தமிழர்களின் போராட்ட வடிவங்கள் சம்பந்தப்பட்ட விடங்களை தெரிவிக்கும்போது சரியான ஆய்வுக்குட்படுத்தி அதுபற்றி தெரியாதவர்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-1225324669226849187?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/1225324669226849187/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=1225324669226849187' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/1225324669226849187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/1225324669226849187'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2010/07/blog-post.html' title='&quot;நீயா நானா&quot; வில் இடம்பெற்ற கசப்பான பொருட்குறிப்பு!'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_M94eRSBTQOw/TD60LcDKD1I/AAAAAAAAABo/4mMDQ9CTV40/s72-c/vijay.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-115641609591959381</id><published>2006-08-24T20:41:00.000+10:00</published><updated>2010-07-16T06:00:05.750+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சிக்னல் லைட் காதல்</title><content type='html'>நெஞ்சில் வேரோடி&lt;br /&gt;போனாள் -அவள்&lt;br /&gt;மனதில் தினம்&lt;br /&gt;நீராடி போறாள்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்றுதான் கண்டேன்&lt;br /&gt;தங்கையுடன்&lt;br /&gt;காரோடி போனாள்…&lt;br /&gt;&lt;br /&gt;உறுதியானது..&lt;br /&gt;&lt;br /&gt;என் நெஞ்சம்&lt;br /&gt;அவள் வயதும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்!&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு&lt;br /&gt;18 தாண்டிற்று&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு லைசன்ஸ்&lt;br /&gt;கொடுத்ததன் மூலம்&lt;br /&gt;அரசு காப்பாற்றிக்கொண்டது&lt;br /&gt;தனது வீதியையும் &lt;br /&gt;எனது விதியையும்!&lt;br /&gt;&lt;br /&gt;அவளால் கர்ப்பமாக்கப்பட்ட &lt;br /&gt;என் கனவு கன்னிகள்&lt;br /&gt;தங்கள்&lt;br /&gt;பிரசவ தேதியை கேட்டு&lt;br /&gt;தினம் தினம் என்னை&lt;br /&gt;பிரட்டி எடுக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு&lt;br /&gt;கருக்கொடை புரிந்த&lt;br /&gt;கலர் நிலவே&lt;br /&gt;கருத்தடை புரியவும் &lt;br /&gt;துணிந்திடுமோ என்று&lt;br /&gt;தயங்குகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;அடி மனதில்&lt;br /&gt;அல் கொய்டாவாய் இறங்கிய&lt;br /&gt;வெடி பொருளே…!!&lt;br /&gt;அடி நான்&lt;br /&gt;அமெரிக்காவில்லையடி&lt;br /&gt;உன்னால்&lt;br /&gt;ஊனின்றி காய்கின்ற&lt;br /&gt;ஆபிரிக்கா..!&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்பு என்று தெரிந்தும்&lt;br /&gt;சிக்னலில் பாய்ந்த காராக&lt;br /&gt;வயதின் விளைவு தெரிந்தும்&lt;br /&gt;வயகராவாகியுள்ளது&lt;br /&gt;என் புத்தி&lt;br /&gt;&lt;br /&gt;கலரடித்த சடையும்&lt;br /&gt;கன காசில் உடையும்&lt;br /&gt;நாய் கடித்த ஜீன்ஸ_ம்&lt;br /&gt;கடுக்கன் குத்திய காதுமாக&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ ஆப்கான்கள் தெருவில்&lt;br /&gt;சல்மான்களாக&lt;br /&gt;திரிவைத்து&lt;br /&gt;திரிகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் உனக்கிட்ட கடிவாளம்&lt;br /&gt;ஏன் வீதியில் கழன்று விழுந்தது&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்போம்..&lt;br /&gt;எம் காதல்&lt;br /&gt;கிளைவேர் விட்டு பரவிடுமா&lt;br /&gt;இல்லை&lt;br /&gt;கிளைமோர் போல சிதறிடுமா&lt;br /&gt;என்று..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-115641609591959381?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/115641609591959381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=115641609591959381' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/115641609591959381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/115641609591959381'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2006/08/blog-post.html' title='சிக்னல் லைட் காதல்'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-114362301381290156</id><published>2006-03-29T19:01:00.000+10:00</published><updated>2010-07-16T06:00:05.750+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இப்படித்தான் பல காதல்(?)......</title><content type='html'>என்னைக் கண்டவுடன் &lt;br /&gt;கடிந்துகொள்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;காலைக்கடன் கழியாத&lt;br /&gt;அவசர அபலையாய்&lt;br /&gt;பரபரக்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;வியர்த்துக் கொட்டிறாள்&lt;br /&gt;விரல்கள் பிசைகிறாள்&lt;br /&gt;விழியை விழுத்திறாள்&lt;br /&gt;&lt;br /&gt;உதட்டை குவிப்பதும்&lt;br /&gt;பின்னர் குலைப்பதுமாய் &lt;br /&gt;காற்றை குடைகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியமாய் சொல்கிறேன்&lt;br /&gt;என்னை நம்புங்கள்&lt;br /&gt;நான் ஒன்றுமே செய்யவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும்&lt;br /&gt;&lt;br /&gt;என்னை கண்டவுடன் அவள்&lt;br /&gt;கடிந்துகொள்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு &lt;br /&gt;காதல் மேல் பயமா – அல்லது&lt;br /&gt;காதலிப்பது பயமா - இல்லை&lt;br /&gt;நான் காதலித்துவிடுவேனோ என்று என்மேலே பயமா – அல்லது&lt;br /&gt;என்னை காதலித்துவிடுவாளோ என்று &lt;br /&gt;தன் மேலே பயமா?&lt;br /&gt;&lt;br /&gt;எதுவுமே தெரியவில்லை &lt;br /&gt;ஆனாலும்&lt;br /&gt;என்னை கண்டவுடன் &lt;br /&gt;கடிந்துகொள்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;த்ரீஷாவாக வேண்டாம் - கடைசி&lt;br /&gt;தீயாகவேனும் இல்லாமலிரு என்று&lt;br /&gt;விழியாலே விண்ணப்பமிட்டு&lt;br /&gt;களைத்துவிட்டேன்&lt;br /&gt;கேட்கிறாளில்லை&lt;br /&gt;&lt;br /&gt;தினம் தினம் &lt;br /&gt;எனை பார்த்து&lt;br /&gt;கடிந்து கொள்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுத்தான் விஷயமறிந்தேன்.&lt;br /&gt;காதோரம் நண்பன் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவள் மகளுக்குத்தான் நான்&lt;br /&gt;ஐ லவ் யூ சொன்னேனாம்”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-114362301381290156?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/114362301381290156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=114362301381290156' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/114362301381290156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/114362301381290156'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2006/03/blog-post.html' title='இப்படித்தான் பல காதல்(?)......'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-112722387700786430</id><published>2005-09-20T23:40:00.000+10:00</published><updated>2010-07-16T06:00:05.751+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>எந்தன் தேசத்தின் குரல்</title><content type='html'>அன்புடன் &lt;br /&gt;நண்பனுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;குளிர் நாட்டிலிருந்து நீயனுப்பிய &lt;br /&gt;தளிர் மடல் கிடைத்தது.&lt;br /&gt;மகிழ்ச்சி.&lt;br /&gt;நீ தமிழை மறக்காததையும் நினைத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் புதினம் கேட்டு எழுதியிருந்தாய்&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுவார்த்ததை போலவே இங்கு &lt;br /&gt;எதுவுமே நடக்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;கொந்தல் மாங்காய் பிடுங்க நாங்கள்&lt;br /&gt;கொக்கத்தடி களவெடுத்த&lt;br /&gt;குமரேசன் பேர்த்தி பிரியாவுக்கு&lt;br /&gt;போனவாரம் கலியாணம்.&lt;br /&gt;கைநிறைய காசோட&lt;br /&gt;பறந்து வந்த கனடா கனவான்&lt;br /&gt;கொத்திக்கொண்டு போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசிக சாலை 'அமைச்சரவையில்' மாற்றம்&lt;br /&gt;தண்ணீர்ப்பந்தல் போட்ட காசில் &lt;br /&gt;தண்ணீ காட்டிப்போட்டார் என்று &lt;br /&gt;பேரிம்பலத்தாரை தூக்கியாச்சு&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காக உன்னுடன் சேர்ந்து&lt;br /&gt;நானும் கலைத்து திரிந்த&lt;br /&gt;பர்வதம் மகள் மைதிலி&lt;br /&gt;இன்னும் காத்திருக்கிறாள்.&lt;br /&gt;ரிஜிஸ்டர் பண்ணீட்டு போன&lt;br /&gt;ஜேர்மன் மாப்பிள்ளை பார்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்குக்காவடியில் தொங்கும்போது&lt;br /&gt;றோட்டோரம் நிண்டு சிரித்து &lt;br /&gt;சிக்னல் கொடுத்த கலாவையே&lt;br /&gt;எங்கட 'புட்போல்" கண்ணன்&lt;br /&gt;கடைசியில கைப்பிடிச்சிட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;கனகற்ற வளவுக்கு&lt;br /&gt;சுத்துமதில் அடிச்சதால &lt;br /&gt;எங்கட கிரிக்கெட் கோஷ்டி இப்ப&lt;br /&gt;பள்ளிக்கூட வளவுக்கு &lt;br /&gt;இடம்பெயர்ந்திட்டுது.&lt;br /&gt;&lt;br /&gt;வழமைபோலவே&lt;br /&gt;வள்ளியரிண்ட வளவு&lt;br /&gt;பங்குப்புளி உலுப்பும்போது&lt;br /&gt;இம்முறையும் நல்ல சண்டை&lt;br /&gt;ஊர் கூடிவேடிக்கை&lt;br /&gt;இரண்டு பேரையும் பொலீஸ்&lt;br /&gt;தூக்கிப்போச்சுது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஊமைக்கொட்டையால&lt;br /&gt;எறிஞ்சு கால் முறிச்ச&lt;br /&gt;கிடா மறி எல்லாத்தையும் வித்திட்டு&lt;br /&gt;வடிவக்காவிண்ட வளவு வாங்கினதோட&lt;br /&gt;இரண்டு மாட்டையும் வாங்கி விட்டிருக்கிறார்&lt;br /&gt;குமாரலிங்கத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைப்புக்கு இன்ஜின் விட்டு&lt;br /&gt;பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த தருமர்&lt;br /&gt;மறைப்புக்கு மதில் கட்டிற அளவுக்கு&lt;br /&gt;ரெண்டு பெடியளையும் சுவிஸ_க்கு அனுப்பீட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தி பார்த்தா &lt;br /&gt;மூஞ்சையை திருப்பிற பத்மா&lt;br /&gt;இப்ப சாதுவா சிரிச்சிட்டு போகுது&lt;br /&gt;புருசனோடு போகும்போது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலியே பத்தி விடுமளவுக்கு&lt;br /&gt;வேகிற வெய்யில்&lt;br /&gt;&lt;br /&gt;வேற என்ன சொல்ல&lt;br /&gt;&lt;br /&gt;அலாரம் வைத்தெழும்பும் &lt;br /&gt;அவதியான நாடென்றாலும்&lt;br /&gt;அடிக்கடி கடிதம் போடு&lt;br /&gt;&lt;br /&gt;நீ வந்து போன சந்தோஷம்&lt;br /&gt;வருமெனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு &lt;br /&gt;இன்னும்&lt;br /&gt;இங்குள்ளவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-112722387700786430?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/112722387700786430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=112722387700786430' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/112722387700786430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/112722387700786430'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/09/blog-post_20.html' title='எந்தன் தேசத்தின் குரல்'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-112651659634443701</id><published>2005-09-12T19:10:00.000+10:00</published><updated>2010-07-16T06:00:05.751+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அமெரிக்காவை அடுத்து மெல்பேர்ணை தாக்கிய புயல்.!!!!!</title><content type='html'>இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மூன்றாவது வெளிநாட்டு இசைநிகழ்ச்சி கடந்த 10 ஆம் திகதி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்றது.ரகுமானின் நிகழ்ச்சிக்கெல்லாம் விளம்பரம் தேவையில்லையாயினம் இங்குள்ள தமிழ் மற்றும் இந்திய ஊடகங்கள் ஒரு மாதமாக ஏதோ ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்பதைப்போல ரகுமானின் படத்தையும் பாட்டுக்களையும் போட்டு மொத்து மொத்து என்று மொத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி நடைபெற்ற இடம் மெல்பேர்ன் றொட் லேவர் அரீனா அரங்கு.ஆஸ்திரேலிய டெனிஸ் நட்சத்திரம் லெய்ட்டன் ஹெய்விட்டுக்குத்தான் வழமையாக அந்த அரங்கில் பார்வையாளர் கூட்டம் சரவெடியாய் வெடிக்கும்.ஆனால் அன்றைய தினம் ஒரு தமிழனின் நிகழ்ச்சிக்காக அவரின் பக்தகோடிகள் அங்கு படையெடுத்திருந்ததன.மெல்பேர்ன் கிரிக்கெட் அரங்குக்கு அண்மையாக உள்ள இவ்வரங்கில்தான் வருடாவருடம் ஆஸ்திரேலிய ஓபன் டெனிஸ் ஆட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.சுமார் 25 ஆயிரம் பேரை அடக்கக்கூடிய இந்த அரங்கு ரகுமானின் நிகழ்ச்சிக்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.(நியாயம்தான்).&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 6.30 மணியளவில் அரங்கை சென்றடைந்தால்,எதிர்பார்த்ததுபோலவே சனத்திரள் அரங்கை முற்றுகையிட்டிருந்தது.ஆனால் டிக்கெற்றுக்களை இணைய வழியாகவே மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் வாசலில் டிக்கெற்றுக்களை காண்பித்துவிட்டு ரசிகப்பெருமக்கள் விரைவாக உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள்.எங்கே பிந்திவிட்டேனோ என்று ஏங்கிக்கொண்டே ஓடிய நான் எனது “அரியாசனத்தை” தேடிப்பிடித்து இருப்பதற்கிடையில் போதும் போதும்; என்றாகிவிட்டது.ஏழு மணிக்கு ஆரம்பாகவேண்டிய நிகழ்ச்சி 7.30 மணிக்கே ஆரம்பமானது.(ஒரு வேளை சந்திரிகா அமைமையார் பிரதம விருந்தினராக வருகிறார் என்றிருந்ததோ தெரியவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்திட்ட அரங்கின் 90 வீதப்பகுதியிலிலும் ரசிகர்கள் திரண்டிருந்ததை பார்த்தபோதுதான் ரகுமானின் சக்தி புரிந்தது.அரங்கமெங்கும் இந்திய இலங்கை மலேசிய சிங்கப்பூர் மற்றும் பலநாட்டு மக்களையும் இசை இழுத்துவந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருடைய கவனமும் மேடையின் வசமிருந்தது.மேடையின் இருபகுதியிலும் இரண்டு பெரிய ப்ரொஜெக்டர்களும் மேடைக்கு பின்னால் சுமார் 50 அடி அகலமாக பாரிய திரையும் நிகழ்ச்சியை தெறிப்பு செய்ய தயாராக இருந்தன.மேடையில் இசைக்குழுவினரின் உபகரணங்களும் ஒரு மூலையில் ட்ரம்ஸ் சக்கரவர்த்தி சிவமணியின் கொட்டு பொருட்கள் முழங்கத்தயாராக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பமானது ……&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 7.30 மணியளவில் நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள் வந்து மகுடிவாசித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'இதோ நீங்கள் எதிர்பார்த்திருந்த &lt;br /&gt;&lt;br /&gt;இசைப்புயல்&lt;br /&gt;&lt;br /&gt;மாய இசைக்கண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;இசை சகாப்தம் &lt;br /&gt;&lt;br /&gt;ஏ………ஆர்………ரகுமான்........................."&lt;br /&gt;&lt;br /&gt; என்று முழங்கியது மேடையின் நடுவே ஒளிப்பிழம்பாக வீசிய வெளிச்ச வட்டத்தின் நடுவே இசைப்புயல் ரகுமான் கையை அசைத்தபடி நின்றுகொண்டிருந்தார்.கரவொலியால் அரங்மே அதிர்ந்தது.ரகுமானின் இசைபோலவே ரசிகர்கள் தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.எனக்கு பின்னாலிருந்த ஒருவர் “அடேய்…! முடி வெட்டீனானடா…!” என’று கத்தினார்.ஆம் வந்தே மாதரம் பாடல் கசெட்டுக்காக வளர்த்திருந்த முடியை வெட்டி ரகுமான் ரொம்பவே இளமையாக தெரிந்தார்.மேடையின் உயரமான இடத்தில் நின்றுகொண்டிருந்த ரகுமான் கையசைத்தவாறே கீழிறங்கிவந்து மைக்கை கையில் எடுத்து கரகோஷத்தின் மத்தியில் “ஆய்த எழுத்து” படத்தில் வரும் “யாக்கைத்திரி….” பாடலை ஹிந்தியில் தொடங்கினார்.எதிர்பார்த்தது கிடைத்து விட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் அடித்த விசில் விண்ணைகிழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மொழி சமத்துவத்தைப்பேண அடுத்து வந்தார் பாடகர் சங்கர் மாகாதேவன்.தமிழர்களின் பக்கத்திலிருந்து கரவொலி வானைக்கிழித்தது. “தனியே தன்னந்தனியே” பாடலுக்கு பலத்த வரவேற்பு.தொடர்ந்து தமிழும் ஹிந்தியுமாக மாறி மாறி பாடல்கள் சென்று கொண்டிருந்தன.'சந்தனத்தென்றலை' ' உப்புக்கருவாடு' போன்ற பாடல்களை உச்சஸ்தாயியில் பாடினார் சங்கர் மகாதேவன்.அவர் பாடிய லகான் படப்பாடலுக்கு அரங்கமே எழுந்த நின்று கைதட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வந்த காந்தக்குரலோன் ஹரிஹரன் மேடையில் ஆடிப்பாடி ரசிகர்களின மகிழ்ச்சிக்கு தீனிபோட்டார்.“டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா” என்ற பாடலில் “மெல்பேர்ண் மலர் போல மெல்லிய மகளா” என்ற வரியை அரங்கில் பெண்கள் அதிகமாக இருந்த இடத்தை காட்டி பாடியபோது அரங்கில் மேலும் உற்சாகம்.  “பச்சை நிறமே பச்சை நிறமே” “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியிலிருந்து எக்ஸ்ட்ரா டெஸிபெல்லில் விசில்கள் பறந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பாடகி சித்ரா பாடிய “கண்ணாளனே” அற்புதம்:ஆனந்தம்.முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தனது பாடல்களை ஒலியேற்றினோர்.‘நான் பாடிய ஒலிப்பதிவுகளுக்கும் இப்போது நான் பாடும் பாடல்களுக்கும் இடையில் எங்கெ வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்’ என்று சவால் விடுவதைப்போல அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காதில் தேன் பாய்ச்சியது.நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது ஜோடிப்பாடல்கள் பாடும்போது கரகோஷம் பெற்ற சாதனா சர்கம் “சிநேகிதனே சிநேகிதனே” பாடல் பாடும்போது பெரும்பாலான வரிகளை தவறவிட்டுவிட்டார்.அது மட்டுமல்ல தனியே பாடிய சில ஹிந்திப்பாடல்களில் கூட தாளத்தை தவறவிட்டுவிட்டார்.அப்போதெல்லாம் ரகுமானினதும் சிவமணியினதும் முகங்களில் முறையே எள்ளும் கொள்ளும் வெடித்தன.ப்ராஜெக்டர் அதையெல்லாம் வடிவாக காண்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“அலைபாயுதே”படத்தில் வரும் “என்றென்றும் புன்னகை” என்ற பாடலுக்கு மேடைக்கு வந்த பாடகர் ப்ளாஸ் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் போதை மருந்து ஏற்றிவிட்டது போல ஆடிப்பாடினார்.மேற்கத்தேய றாப் பாடல்களில் வரும் வொற்களை அப்படியே பாடலுக்கு நடுவில் பாடியது மடடுமல்லாமல் அவரது ஆடல் மற்றும் உடையும் மெல்பேர்ண் ரசிகர்கள் சுலபமாக உள்வாங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழச்சியின் நட்சத்திரப்பாடலாக “அந்த அரபிக்கடலோரம்” பாடலை சொல்லலாம்.ரகுமானின் பம்பாய்க்காக இறக்கிய அந்தக்கள்ளு பழையது என்றாலும் அதை அரங்கில் அள்ளி வீசியவுடன் முழு ரசிகர்களுமே வெறிபிடித்தவர்களாக எழுந்து நின்றாடினர்.ரகுமான் பாடியாதாலோ என்னவோ அந்தப்பாடலுக்கு ரசிகர்கள் காட்டிய உற்சாகம் பாடலை முடிக்ககவிடாமல் பண்ணிவிட்டது.ஹம்மா ஹம்மா என்று பாடல் முடிந்த பின்னரும் ரகுமான் வேகமாக பாடியபோது மம்மிகள்கூட எழுந்து நின்று ஆடினர்.டம்மிகளான கணவர்கள் தம்முடைய “சக்தி”களுக்கு இப்படியும் சக்தி வருமோ என்று வாய்பிழந்து பார்த்தவண்ணமிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 9.30 மணியளவில் சிவமணியின் ட்ரம்ஸ் வேடிக்கை ஆரம்பமானது.அரங்கில் இடியோடு மழை பொழிந்தமாதிரியாக அவர் நடத்திய கச்சேரி முடியும்போது அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.மேடையில் அவருக்காக வைக்கப்பட்டிருந்து தாரை தப்பட்டைகள் எல்லாவற்றையும் போட்டு அடித்த அதுபோதாது என்று தனது கன்னத்திலும் தட்டி கொஞ்ச நேரம் கச்சேரி நடத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்னர் மேடையின் சாதனா சர்கம்,ஹரிஹரன்,சித்ரா ஆகியோர் கதிரையிலிருந்தவாறு சில பாடல்களை ஆலாபனை செய்தனர்.'உயிரே உயிரே' 'நிலா காய்கிறது' 'உதயா உதயா' போன்ற பாடல்களை ஹரிஹரன் தனக்கே உரிய பாணியில் சங்கதிகள் வைத்து பாடியபேர்து இப்படியும் இந்தப்பாடல்களை பாடலாமா,இப்படியும் ஒர பாடகரா என்று எண்ணத்தோன்றியது.சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலாபனைக்கு ரகுமான் பியானோவில் கொடுத்த தனி ஆவர்த்தனம் ரசம்.ரம்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகுமானின் தங்கை ரேஹானா பாடிய 'தைய தைய தையா தையா' பாடலும் தாளம்போடவைத்தது.பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவேளையின் பின்னர் மென்மையான பாடல்களே பெரும்பாலானவையாக அமைந்ததால் அரங்கில் ஆரம்பத்தில் காணப்பட்ட உற்சாகம் மிஸ்ஸிங்.கதிரையின் விளிம்புவரைவந்து எம்மையறியாமல் தாளம்போட:டுக்கொண்டிருந்த நாம் இடைவேளையின் பின்னர் வந்த சில பாடல்களால் அலுப்படைந்ததை சொல்லித்தான்ஆகவேண்டும்.ஆனால்,ரகுமான் பாடிய தேசம் படத்தின் 'உந்தன் தேசத்தின் குரல் தொலைதூரத்தில் அதோ' என்ற பாடல் நெஞ்சை சாதுவாக கசியவைத்தது.ஊர் ஞாபகத்துக்கு சாதுவாக ஊசியேற்றிச்சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு சில நல்ல பாடல்கள் பாடப்பட்டபோதும் 'ஆறரைக்கோடி பேர்களில் ஒருவன்" உட்பட சில பாடல்களுக்கு மேடையில் இசையமைக்காமல் ஒறிஜினல் பாடலின் பதிவை போட்டுவிட்டு குரலை மட்டும் காட்டி பார்வையாளர்கள பேய்க்காட்டும் முயற்சிளை பாடகர்கள் மேற்கொண்டமை (ரகுமான் உட்பட)  எரி;ச்சலை தந்தது.சில பாடல்களுக்கு ரகுமானுக்காக ரசிகர்கள் கைதட்டி ஆறுதலளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை 'ரங்கீலா ரங்கீலா" மற்றும் சங்கர் மகாதேவனுடன் 'மரம் கொத்தியே மரம் கொத்தியே" ஆகிய பாடல்களை பாடிய பின்னணிப்பாடகிகள் சிலரைப்பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும்.அவர்கள் உட்பட சுமார் பத்து பெண்கள் மற்றும் நான்கு இளைஞர்கள் மேடையின் ஓரத்தில் கோரஸ் பாடகர்கள் என்ற பெயரில் நின்று அக்ஷன் போட்டுக்கொண்டிருந்தனர்.அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான்.நாங்கள்.அரங்கிலிருந்து நிகழ்ச்சியை பார்த்தோம்.அவர்கள் மேடையில் நின்று நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.இவர்கள் சிலவேளையில் திடீரென ஆடினார்கள்.சிலவேளை பாடினார்கள்.இதனால் எந்த வகையில் இவர்களை நிகழ்ச்சியில சேர்ப்பது என்று என்று நிகழ்ச்சி முடியும்வரை யோசித்துக்கொண்டிருந்தேன்.(அதில் இரண்டொரு சகோதரிகள் பாடிய பாடலை விட அவர்கள் அழகாக இருந்தார்கள்.அடிக்கடி க்ளோசப்பில் காண்பித்த கமரா நண்பருக்கு நன்றி)&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வு முடியும் தறுவாயில் பாய்ஸ் பட 'சரிகமா பதநிஸா....." பாடலை அங்கு கோரஸ் பாடிய இளைஞர்களே பாடினர்.பாடசாலை ஆண்டு விழா பாட்டுப்போட்டி ரேஞ்சில் பாடப்பட்ட அந்தப்பாட்டு நிகழ்ச்சிக்கு கரும்புள்ளியை வைத்துவிடுமோ என்று நினைத்துக்கொண்டிருக்கையில் இறுதியாக வந்து 'வந்தே மாதரம்" பாடலை அசத்தலாக பாடி கறைகளை கழுவிவிட்டார் ரகுமான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எதிர்பார்த்த 'சொல்லாயோ சோலைக்கிளி". 'வாராக நதிக்கரையோரம்" மற்றும் ரகுமானி ட்ரேட் மார்க் பாடல்களான காதலன் துள்ளிசைக்கள்ளுகள் நிகழ்வி;ல் வராதது சின்ன வருத்தம். &lt;br /&gt;&lt;br /&gt;குவைட் மற்றும் அமெரிக்காவில் முன்னர் நடைபெற்ற ரகுமானின் ஏனைய இசைநிகழ்ச்சிகளுடன் பார்க்கையில் மெல்பேர்ண் நிகழ்வு அவ்வளவு பிரமாதம் என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட வெளிநாடுகளில் அறா விலையில் டிக்கெட்டுக்களை விற்றுவிட்டு பேய்க்காட்டு கச்சேரிகளை வைத்து எரிச்சலூட்டும் நிகழ்வுகளிலும் பார்க்க எத்தனையோ மடங்கு பெறுமதியானதாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் இரவு 11.30 மணியளவில் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது எல்லோரது முகத்திலும் ரகுமானை நேரில் பாத்தாச்சு என்று ஆனந்தக்களை தெரிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-112651659634443701?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/112651659634443701/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=112651659634443701' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/112651659634443701'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/112651659634443701'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/09/blog-post_12.html' title='அமெரிக்காவை அடுத்து மெல்பேர்ணை தாக்கிய புயல்.!!!!!'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111591149234008923</id><published>2005-05-13T01:18:00.001+10:00</published><updated>2010-07-15T17:28:37.658+10:00</updated><title type='text'>பிரபாகரன் செய்தது சரியா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_M94eRSBTQOw/TD64RY2RO_I/AAAAAAAAABw/Q-6Up2NFQf0/s1600/CharlesAnthonySeelan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/_M94eRSBTQOw/TD64RY2RO_I/AAAAAAAAABw/Q-6Up2NFQf0/s320/CharlesAnthonySeelan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494031204305943538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளும் தமிழ்மக்களும் தமது போராட்டம்பற்றி சர்வதேச சமூகத்துக்கும் தென்னிலங்கை மக்களுக்கும்கூட எடுத்துக்கூறி அவர்கள் ஈழப்போராட்டத்தின் யதார்த்தத்தை உணர்ந்துகொண்டுவிட்டார்கள்.ஆனால் தமிழர்களில் ஒரு சிறுபகுதியினர் உலகம் தட்டையானது என்ற பிடிவாதத்துடன் பிரான்ஸிலிருக்கும் ஒரு தொகுதியினர்போல ஈழப்போராட்டத்தின் உண்மைநிலையை உணர மறுத்துநிற்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் ஒரு பழுத்த ஈழத்தமிழ் எழுத்தாளரை சந்தித்தேன்.அவருடன் தனியாகப்பேசிக்கொண்டிருந்தபோது கதை சாதுவாக அரசியலில்விழுந்தது.அப்போது அவர் விடுதலைப்புலிகள் குறித்தும் அவர்களது செயற்பாடுகள் குறித்து படுபயங்கரமாக விமர்சனம் செய்தார்.அது அவரது கருத்துச்சுதந்திரம்.அதில் நான் தலையிடவில்லை.அவர் அலசிய அரசியற்பரப்புகளில் அவருக்கு என்னிடம் தக்கபதில்கள் இருந்தபோதும் அதை எதிர்பார்க்காதவராக பேசிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சியாக கதைத்துவிட்டு கொஞ்சம் மூச்சை விட்டவர்,“அது சரி தமிழ் தமிழினம் என்று சண்டை பிடிக்கிற பிரபாகரன் ஏன் தன்ர மகனுக்கு சார்ள்ஸ் அன்ரனி எண்டு ஆங்கிலப் பெயர் வச்சவர்.வெதுப்பகம் வெதுப்பி எண்டு தூயதமிழ் பெயர்களை வைக்க சொல்லிறவர் தன்ர மகனுக்க நல்ல தூயதமிழில ஒரு பெயரை வச்சிருக்கலாமே?” எண்டு அப்போதுதான் என்னிடம் பதில் எதிர்பார்த்து ஒரு கேள்வியைக்கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டம் வளர்ச்சி கண்டுள்ள அளவுக்கு அதை விமர்சிப்பவர்களின் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இல்லாவிடினும் இப்படியான கொஞ்சக்கேள்விகளுடன்தான் சிலர் தமிழ்த்தேசியத்துக்கு எதிரான பிரசாரத்தில் இறங்கியிருப்பதால் இந்தக்கேள்வியை கேட்டவருக்கு நான் ஆதாரத்துடன் அளித்த பதிலை இங்கு பதிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சார்ள்ஸ் அன்ரனி என்பவர் ஈழப்போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரர்களில் ஒருவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால தாக்குதல் சம்பவங்களில் பங்கேற்ற அற்புதமான வீரன்.தாக்குதல்களை சிறப்பாக ஒழுங்கமைத்து ஒருங்கமைத்து அதன்மூலம் எதிரியின் கண்களில் விரல் விட்டு ஆட்டிவந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருகோணமலையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலகட்டங்களில் - எழுபதுகளின் பிற்பகுதியில் - அப்போதிருந்தவர்களில் வயதில் குறைந்தவராக இருந்தபோதும் தலைவர் பிரபாகரனின் உயிர்நண்பனாக இருந்தார்.அக்காலப்குதியில் சிங்கள இராணுவ,பொலீஸாருக்கு எதிரான கெரில்லா தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1982 இல் உமாமகேஸ்வரன் தனது விசுவாசிகள் சிலருடன் விடுதலைப்புலிகள் அமைப்பலிருந்து விலகிச்சென்றதும் புலிகளின் ஆட்பலம் குறைந்துவிட்டது என்றும் அதனால் அவர்களின் இராணுவபலம் குறைந்துவிட்டது ஏனைய போராளி இயக்கங்கள் கதைகளைப்பரப்பின.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்கதைகளுக்கு ஆப்பு வைத்து புலிகளின் பலத்தை நிரூபித்து தமக்கு மேலும் பலம் சேர்த்தவர்தான் சார்ள்ஸ் அன்ரனி.அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சாவகச்சேரி பொலீஸ் நிலையத்தாக்குதலே அது.(உமாமகேஸ்வரனின் வெளியேற்றத்துக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்தத்தாக்குதலுக்கு முன்னதாக நெல்லியடியில் பொலீஸ் ரோந்து அணி மீதும் பொன்னாலை கடற்கரையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வரவை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் எதிர்பார்த்தஅளவுக்கு புலிகளுக்கு வெற்றியைத்தரவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;1982 ஒக்டோபர் 27 ஆம் திகதி சார்ள்ஸ் அன்ரனி தலைமையில் அருணா,சங்கர்,சந்தோசம்,மாத்தையா,புலேந்திரன்,ரகு,பஷீர்காக்கா ஆகியோர் அடங்கிய எட்டுப்பேர் அடங்கிய புலிகள் குழு மினி வானொன்றில் சாவகச்சேரி பொலீஸ்நிலையத்துக்கு விரைந்தது.பொலீஸ் நிலையத்துக்கு முன்பாக வானை நிறுத்திவிட்டு இறங்கிய சார்ள்ஸ் அன்ரனி தலைமையிலான ஒரு தொகுதியினர் வாசலில் காவலுக்கு நின்ற பொலீஸை சுட்டுவிட்டு உள்ளே சென்று ஒவ்வொரு அறையையும் திறந்து பார்த்து பார்த்து ‘க்ளியர’; பண்ணிக்கொண்டு சென்றனர்.இந்நேரத்தில் அருணாவும் பஷீர்காக்காவும் அங்கிருந்த பொலீஸின் ஆயுதங்களை அள்ளினர்.திடீர்தாக்குதலுக்கு முகம் கொடுக்கமுடியாது தப்பிய ஒடிய பொலீஸார் ஒருவர் மாடியிலிருந்து குதித்து கால் முறிந்தது.ஆனால் அங்கு மேல்மாடியில் நின்று உஷாரான சில பொலீஸார் திருப்பிசுட்டதில் புலேந்திரனின் தோளில் காயம்.ரகுவின்; வலது கைஎலும்பு முறிந்தது.சார்ள்ஸ் அன்ரனிக்கு கணுக்காலில் காயம்.பொலீஸ் நிலையத்திலிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு எஸ்.எம்.ஜி,19 ரிப்பீட்டர்கள்,9 ரைபிள்ஸ்,ஒரு பிஸ்டல் ஆகியவற்றையும் காயமடைந்தவர்களையும் மற்றவர்களையும் அருணா வானில் தூக்கிப்போட அங்கிருந்து அனைவரும் தப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இல்லாத நேரங்களில் புலிகளின் பதில் தளபதியாக பொறுப்புவகிக்கும் சார்ள்ஸ் அன்ரனிக்கு காயம் ஏற்பட்டதால் தலைவர் விரைந்து செயற்பட்டார்.பாக்குநீரிணை வழியாக சார்ள்ஸ் அன்ரனியை தமிழ்நாட்டுக்கு படகு மூலம் கொண்டுசென்று சிகிச்சை அளித்த பிரபா தன் நண்பனுடன் கூடவிருந்து அவனுக்கு சுகமானதும் அவனுடன் தாயகம் திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;1983 ஜீலை 15 ஆம் திகதி….&lt;br /&gt;&lt;br /&gt;சார்ள்ஸ் அன்ரனி அருணா மற்றும் கணேசுடன் மீசாலையில் ஒரு வளவில் இருந்து இளநீர் குடித்துக்கொண்டிருந்தான்.எவனோ எட்டப்பன் சிங்களப்படைகளுக்கு இந்தத்தகவலை கொடுக்க கவசவாகனங்கள் ஜீப்களில் திடீரெனவந்த சிங்களப்படையினர் சார்ள் அன்ரனி இருந்த இடத்தை முற்றுகையிட்டனர்.இளைஞன் ஒருவன் ‘ஆமி வந்துவிட்டான்’ என்று ஒடி வந்து விஷயத்தை சொல்ல சைக்கிளையும் தூக்கிக்கொண்டு மீசாலை வயற்கரையால் சார்ள்ஸ் அன்ரனியும் ஏனைய இருவரும் பறந்தனர்.ஏற்கனவே சாவகச்சேரி தாக்குதலில் கணுக்காலில் விழுப்புண் அடைந்த சார்ள்ஸ் அன்ரனியால் வேகமாக ஓடமுடியவில்லை.அப்போது இராணுவம் கலைத்துச்சுட்டதில் இனி ஓடமுடியாது என்றெண்ணிய சார்ள்ஸ் அன்ரனி அருணாவையும் கணேசையும் ஓடித்தப்புமாறு கலைத்துவிட்டு எதிரியின் கைகளில் சிக்காமல் வயல்வெளிக்குள்ளேயே தன்னை மாய்த்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீர்வேலியில் கிட்டு,செல்லக்களி மற்றும் பண்டிதர் ஆகியோருடன் இயக்கத்தின் நிதிவிடயங்கள் சம்மந்தமாக பேசிக்கொண்டிருந்த பிரபாவுக்கு சார்ள்ஸ் அன்ரனி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.பிரபா அந்தக்கணம் அடைந்த உணர்வு பற்றி கிட்டு பின்னர் ஒரு முறை எழுதிய கட்டுரையில் “தலைவர் அப்போது அடைந்த அதிர்ச்சியை வார்த்தையில் வெளிப்படுத்துவது சாத்தியமற்றது.”-என்று குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஒப்பற்ற தளபதி மட்டுமல்லாமல் நல்ல நண்பனையும் அன்று தலைவர் பிரபா இழந்தார்.மூன்று வருடங்களின் பின்னர் பிறந்த தனது முதலாவது பிள்ளைக்கு தலைவர் தனது நண்பனின் ஞாபகார்த்தமாக அவனது பெயரையே சூட்டினார்.விடுலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட முதல் படையணிக்கும் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு என்றே பெயரிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கதையை கேட்ட பிறகு என்னுடன் கதைத்தவருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறைத்தெரிந்து கொள்ளாதவர்களும் உண்மையைப்புரிந்து கொள்ளாதவர்களும் பரப்பும் இத்தகைய வீண்வம்புகள் தமிழர்களாலேயே கூறப்படும்போது அது உண்மை என்ற தோற்றப்பாடு எழுகிறது.ஆகவே தமிழ் இனத்தின் வரலாற்றை அறிந்து புரிந்து நடுநிலையான கருத்தை வெளியிடவேண்டிய அவசியத்தை உணரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு புலிகளுக்கு ஆதரவளிக்கும்படி யாருக்கும் நான் விண்ணப்பம்போடவில்லை.ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டத்தை உண்மையின் பக்கம் நின்று நடுநிலையாளனாக விமர்சிக்கக்கோருகிறேன்.தமிழ்நாடு தினமலரில் வெளிவந்ததது போன்ற  செக்ஸ் டாக்டர் பிரகாஷ{டன் புலிகளுக்கு தொடர்பு என்ற செய்திகளை வைத்து ஆராய்ந்து சந்தேகிக்காமலிருக்கவே இந்த வேண்டுகோள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111591149234008923?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111591149234008923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111591149234008923' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111591149234008923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111591149234008923'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/05/blog-post_13.html' title='பிரபாகரன் செய்தது சரியா?'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_M94eRSBTQOw/TD64RY2RO_I/AAAAAAAAABw/Q-6Up2NFQf0/s72-c/CharlesAnthonySeelan.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111521711938618824</id><published>2005-05-05T00:30:00.000+10:00</published><updated>2005-05-05T00:31:59.396+10:00</updated><title type='text'>பாலர் அரசியல் பாடப்பரீட்சை</title><content type='html'>பாலர்களுக்கான அரசியல் பாடப்பரீட்சைக்கான இக்கேள்விக்கொத்து இவர்களுக்காகவே இலகுவான முறையில் தயாரிக்கப்பட்டது.இந்த கேள்விகளுக்கு அவர்கள் விடையெழுதும்போது செய்தித்தாள்களை அவர்களுக்கு அருகில் வைக்கவேண்டாம்.பெரியவர்கள் இதனை கவனத்தில் கொண்டால் நன்று.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லது சிறுவர் சிறுமியரே.உங்களுக்கான நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1)ஹிட்லர்,முசோலினி,ரொபேட் முகாபே,சந்திரிகா ஆகியோருக்கு இடையில் காணப்படுவது-&lt;br /&gt;a)ஒற்றுமை&lt;br /&gt;b)வேற்றுமை&lt;br /&gt;c)கூறமுடியாது&lt;br /&gt;d)ஒன்றுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;2)இலங்கையில் அடுத்த ஒரு வருடத்துக்குள் கொலைசெய்யப்படவுள்ள பத்திரிகையாளரின் பெயர்&lt;br /&gt;a)பண்டார&lt;br /&gt;b)திஸாநாயக்க&lt;br /&gt;c)ரணசிங்க&lt;br /&gt;d)சுப்ரமணியம்&lt;br /&gt;&lt;br /&gt;3)இன்னும் இரண்டுவாரத்தில் கிழக்கில் படுகொலைசெய்யப்படவுள்ள தமிழ்இளைஞனின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக பொலீஸார் கண்டுபிடிக்கவுள்ள கைத்துப்பாக்கியின் ரகம்&lt;br /&gt;a)2 மில்லி மீற்றர்&lt;br /&gt;b)4 சென்ரி மீற்றர்&lt;br /&gt;c)9 மில்லி மீற்றர்&lt;br /&gt;d)9 சென்ரி மீற்றர்&lt;br /&gt;&lt;br /&gt;4)கொழும்பு வரவுள்ள நோர்வேயின் விசேடதூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வன்னிக்குச்செல்லவுள்ள மார்க்கம்&lt;br /&gt;a)கப்பல்&lt;br /&gt;b)ஹெலிக்கொப்டர்&lt;br /&gt;c)ரொக்கெட்&lt;br /&gt;d)பரசூட்&lt;br /&gt;&lt;br /&gt;5)புலிகள் யாரை படையில் சேர்ப்பதாக கடந்த வாரம் த ஐலன்ட்,திவயின பத்திரிகைகளில் வெளியானது&lt;br /&gt;a)ஸ்ரீலங்கா படையினரை&lt;br /&gt;b)விதவைகளை&lt;br /&gt;c)வீட்டுப்பணிப்பெண்களை&lt;br /&gt;d)சிறுவர்களை&lt;br /&gt;&lt;br /&gt;6)அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவரின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவுள்ள இலங்கை அரசியல் கட்சியின் பெயர்&lt;br /&gt;a)ஐ.தே.க.&lt;br /&gt;b)தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு&lt;br /&gt;c)ஜே.வி.பி.&lt;br /&gt;d)மலையக மக்கள் முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;7)இலங்கை அரசியல் கட்சித்தலைவர்களிடையே பாய்ச்சல்போட்டி வைத்தால் வெற்றி பெறக்கூடியவர்&lt;br /&gt;a)ரணில் விக்கிரமசிங்க&lt;br /&gt;b)சோமவன்ஸ அமரசிங்க&lt;br /&gt;c)சம்பந்தன்&lt;br /&gt;d)ஆறுமுகம் தொண்டமான்&lt;br /&gt;&lt;br /&gt;8)ஜனாதிபதி மாளிகைக்குள் காணப்பட்ட மூட்டைப்பூச்சி குறித்து குற்றம் சாட்டப்படக்கூடிய அமைப்பு&lt;br /&gt;a)றோ&lt;br /&gt;b)விடுதலைப்புலிகள்&lt;br /&gt;c)ஐ.ஆர்.ஏ&lt;br /&gt;d)மேற்கூறிய எதுவுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;9)“தம்மைத்தாக்கிய சுனாமியை விடுதலைப்புலிகள்தான் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்.இந்தியாவினதும் இல்ஙகையினதும் இறமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக உள்ள விடுதலைப்புலிகளின் நடவடிக்கை குறித்து இனியாவது இந்தியாவின் நடுவன் அரசு கவனமாக இருக்கவேண்டும்.இந்த சம்பவத்தை உதாரணமாகக்கொண்டு இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்ளவேண்டும்”.இந்த அறிக்கையை விடுத்திருக்கக்கூடியவர்-&lt;br /&gt;a)கு.கஜேந்திரகுமார்&lt;br /&gt;b)பெ.சந்திரசேகரன்&lt;br /&gt;c)லக்ஷ்மன் கதிரகாமர்&lt;br /&gt;d)மனோ கணேசன்&lt;br /&gt;&lt;br /&gt;10)“குசினிக்குள் கூட்டாட்சியும் படுக்கையறை சுவருக்குள் சுயாட்சியும்தான் கணவன் மனைவிக்கு இடையிலான நிரந்தர அமைதிக்கு சுமூக தீர்வாக அமையும்”.இந்த அறிக்கையை விடுத்திருக்கக்கூடியவர்&lt;br /&gt;a)வரதராஜப்பெருமாள்&lt;br /&gt;b)டக்ளஸ் தேவானந்தா&lt;br /&gt;c)சித்தார்த்தன்&lt;br /&gt;d)சிறீகாந்தா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111521711938618824?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111521711938618824/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111521711938618824' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111521711938618824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111521711938618824'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/05/blog-post.html' title='பாலர் அரசியல் பாடப்பரீட்சை'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111400435999604707</id><published>2005-04-20T23:38:00.000+10:00</published><updated>2010-07-16T06:00:05.751+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பக்கெற் படுத்தும் பாடு</title><content type='html'>வெளிநாடென்றாலே உங்கள் எல்லாருக்கும் தெரியும் இஞ்ச எங்கட கலாசாரம் பண்பாடு போல விஷயங்களை கொஞ்சம் அசந்தாலும் இன்னொரு உலகத்துக்குள்ள உள்வாங்கிப்போடுவாங்கள்;.அப்படிப்பட்ட ஒரு இயந்திர வாழக்கை வலை.&lt;br /&gt;&lt;br /&gt;காலகாலமாக பேணி வாற எங்கட கலாசாரம் பண்பாடு என்ற பல விஷயங்கள் இஞ்ச இப்பவே எக்கச்சக்கமா மாறிப்போச்சு.இருக்கிற கொஞ்ச நஞ்சத்தையும் கட்டிக்காக்கிறது எண்டிறது டைனோசருக்கு கோமணம் கட்டிறது போல பெரிய வேலையாக்கிடக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்துக்கு சாப்பாட்டு விஷயத்தை எடுத்துக்கொண்டா எல்லாம் பக்கெற்றிலதான்.ஊரில கறந்த பால மாட்டை பாத்துக்கொண்டே குடிக்காலாம்.இஞ்ச பக்கெட்டில வாற பால் எங்கட கைக்கு வரேக்க சில நேரம் மாடே செத்துப்போயிருக்கும்.அதுபோலத்தான் எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மசுக்குட்டி இருந்தாலும் பரவாயில்லை எண்டு எட்டி ரெண்டு பிடுங்கி குழம்பு வக்கிற முருங்கைக்காயையே இஞ்ச போத்திலுக்குள்ள அடைச்சுப்போட்டாங்கள் எண்டா பாருங்கோவன்.அது போல கன விளையாட்டுகள்.சாப்பிடேக்க அதுகளிண்டை உண்மையான ருசியே தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;உந்த உல்டா விளையாட்டுகளுக்கு இஞ்ச பிரதான சாமானா பாவிக்கிறது பக்கெற்தான.வந்து பாத்தா தெரியும் எல்லாம் பக்கெற்.பாணும் பக்கெற் பாலும் பக்கெற் பாயும் பக்கெற் படுக்கிற தலையணையும் பக்கெற்.சந்தையில போய் எதையெடுத்தாலும் பக்கெற்.சரி ஏதோ சுகாதாரம்:காலநிலை மாறுபாட்டுக்குள்ள பாதுகாக்கிறது கஷ்டம் அது இது எண்டு சவட்டு மேனிக்கு போட்டுக்கட்டிறியள் எண்டுவிட்டா போன கிழமை வருஷப்பிறப்பண்டு எனக்கு கிடைச்ச அனுபவம் என்னை ஆகவும் உரு ஏத்தி விட்டுட்டுது.&lt;br /&gt;&lt;br /&gt;தெரிஞ்ச ஆக்களிண்ட வீடு.அவயள் இஞ்ச கனகாலமா இருக்கினம். வருஷப்பிறப்பண்டு அங்க போனா ‘தம்பி வாங்கோ’ அது இது எண்டெல்லாம் கதைச்சுப்போட்டு.‘நல்ல நாளில வந்திருக்கிறியள் சாமியறைக்கு வாங்கோ கைவிசேஷம் தாறன்’ எண்டார் வீட்டுப்பெரியவர்.சரி போயாச்சு டொலரில வாறத ஏன் விடுவான் எண்டொரு வரட்டு நினைப்பபோட போனன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க அந்தப்பெரியவர் கைவிசேஷத்தை கையில தர கண்ணில ஒற்றி கும்பிட்டுட்டு என்னடா ஏதோ புதுசாக்கிடக்கெண்டு பாத்தா,கைவிசேஷம் பக்கெட்டுக்குள்ள இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கோதாரியடா இது, எங்கட சமய முறைப்படி கைவிசேஷத்தை வெத்திலையில வச்சு மங்களகரமா குடுக்கிறதுதானே வழக்கம்.அதையே இஞ்ச எங்கட சனம் மாத்திப்போட்டுது எண்டதை நினைக்கத்தான் என்ன செய்யிறதெண்டு தெரியாம பெருமூச்சு வந்திச்சுது.&lt;br /&gt;&lt;br /&gt;இவயளெ இப்பிடியெண்டா இனிவாற தலைமுறை இன்ரனெட்டில கிரடிட் கார்ட்டால கைவிசேஷத்தை குடுத்திட்டு போய்க்கொண்டே இருப்பினம் போலத்தான் கிடக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;(குறிப்பு:தந்த கைவிசேஷக்காசு காணாது எண்ட வெறுப்பில இந்தப்பதிவை எழுதியிருக்கிறார் எண்டு யாரும் நினைக்கவேண்டாம் என்பது பணிவான வேண்கோள்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111400435999604707?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111400435999604707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111400435999604707' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111400435999604707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111400435999604707'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/04/blog-post_20.html' title='பக்கெற் படுத்தும் பாடு'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111391508920373027</id><published>2005-04-19T22:45:00.000+10:00</published><updated>2005-04-19T22:51:29.206+10:00</updated><title type='text'>போதுமடா சாமி…..!</title><content type='html'>அப்பாடா…..!&lt;br /&gt;&lt;br /&gt;மகள் ஆசைப்பட்ட மாதிரி செவ்வாயிற்கு கூட்டிக்கொண்டுபோய்வந்தாச்சு.ஏதோ பெரிய பொறுப்பு முடிஞ்ச மாதிரிக்கிடக்குது.தன்ர வகுப்பு சிநேகிதிமார்; எல்லாரும் போனமுற விடுதலைக்கு செவ்வாய் கிரகத்துக்கு போய்ட்டு வந்தவையாளாம்.தன்னக்கூட்டிக்கொண்டு போகேல்லையாம் எண்டு ரெண்டு மாதமா ஒரே நச்சரிப்பு.ஒருமாதிரி அமெரிக்காவில இருக்கிற மச்சான்காரனிட்டச்சொல்லி ரொக்கெட்டுக்கு புக் பண்ணி குடும்பத்தோட போட்டு வந்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க போறதெண்டா சும்மாவே என்ர மனுசிக்காரியிண்ட சொந்தக்காரர் அங்கதான் இருக்கினம்.அவயளுக்கு அது இது சும்மா சின்ன சாமாங்களைத்தான் இந்தமுறை வேண்டிக்கொண்டு போனனாங்கள்.அதுக்கு மகளே தன்ர பொக்கற் மணியா வச்சிருந்த 6000 டொலரைத் தந்தவ.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பமெண்டு வந்திட்டா பொறுப்பும் வேலையளும் கூடவே சேந்தெல்லே வந்திடுது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி நாளைக்கு சின்னவரை எய்ட்ஸ் நோய்த்தடுப்பூசி போட கூட்டிக்கொண்டு போகவேணும்.கடைசியா எடுத்த கணக்கெடுப்பின்படி நூறு பேரில 60 பேருக்கு எய்ட்ஸ் இருக்காமெண்டா தெரியாதே எல்லாரும் கவனமா இருக்கவேணும்.அதோட இவர் க்ளோனிங்கில பிறந்ததால நாங்கள் கொஞ்சம் ஆளில கூடக்கவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்பிடி வேலையளெண்டு ஓடித்திரியவே நேரம் சரி.ஆனா என்ர செல்ல மகளிருக்கிறா.அவவிண்ட லைவ் ஸ்டைல் வித்தியாசம்.அவவுக்கு இந்தப்பழைய காலத்து பாட்டுகளெண்டா காணும்.வீட்டில பெரிய சத்தமா போட்டிட்டு கேட்டு ரசிக்கிறதுதான் அவவிண்ட வேலை.என்னெண்டு தெரியேல்ல.அவளுக்கு இந்த ஏ.ஆர்.ரகுமான்,வித்யாசாகர்,யுவன் சங்கர்ராஜா போல பழைய ஆக்களிண்ட அந்தக்காலப்பாட்டுகளெண்டா காணும் அப்படியே கேட்டு ரசிச்சுக்கொண்டிருப்பா.அவவிண்ட பேரனுக்கும் அப்பிடித்தான்.கடைசியா செவ்வாயிற்கு போகேக்க.அவர் அங்க உந்த தனுஷ்,சிம்பு எண்டு அந்த பழையகாலத்து நடிகர்மாரிண்ட படங்களையெல்லாம் சேத்து வச்சு போட்டுபாத்துக்கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்கு முழுதும் தலைக்கு மேல வேலை.இண்டைக்காவது கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா………….&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியாவில என்ன சொல்லுது.&lt;br /&gt;&lt;br /&gt;“இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்திகள்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தலைப்புச்செய்திகள்&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படவேண்டும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு”&lt;br /&gt;&lt;br /&gt;போதுமடா சாமி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111391508920373027?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111391508920373027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111391508920373027' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111391508920373027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111391508920373027'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/04/blog-post_19.html' title='&lt;strong&gt;போதுமடா சாமி…..!&lt;/strong&gt;'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111378898743188579</id><published>2005-04-18T11:48:00.000+10:00</published><updated>2010-07-16T06:00:05.752+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பிள்ளையார்சுழியும் அகப்பைக்காம்பும்</title><content type='html'>பள்ளிக்கூடத்தில பா ஓதல் பண்ணிசை எண்டு சும்மா ஆக்களில்லாத குறைக்கு மேடையில ஏறி இறங்கிப்பாடினதால ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை எண்ட கணக்கில நான் பெரிய பாடகர் எண்ட நினைப்பு அங்க எல்லாருக்கும் இருந்தது.தமிழ்ச்சங்க விழா அது இது எண்டு எதிலையும் சும்மா ரெண்டு பாட்டைப்பாடி கைதட்டு வாங்கி அந்தப்பெயரை கனகாலமா தக்கவச்சுக்கொண்டிருந்தனான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகும் எங்கட ஆக்கள் சும்மா இருக்கேல்ல.அங்க ஒரு கோஷ்டி இஞ்ச ஒரு கோஷ்டி எண்டு இழுத்து திரிஞ்சு பாட வக்கிறது வழக்கம்.நானும் விடுகிறதில்லை.கல்லெறி வாங்காத அளவுக்கு நைஸா குரல் குடுத்திட்டு வாறது.ஆனா பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறினா பிறகு வேற இடங்களுக்கு போய் பாடிறது எண்டு வீட்டை தெரியாது. தெரிஞ்சா துலஞ்சுது. பிறகு அப்பர் வீட்டிலேயே பக்கவாத்தியம் வாசிக்க வெளிக்கிட்டுடுவார்&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடித்தான் ஒருக்கா சங்குவேலி பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில இருக்கிற வைரவர் கோயில் திருவிழாவுக்கு எங்கட ஆக்களிண்ட இசைக்கச்சேரி எண்டு அறிவிச்சாச்சு.பிறகென்ன நாலஞ்சு நாளா றியேஸல் நடக்குது.நானும் வீட்டை  ஒவ்வொரு  காரணத்தைச்சொல்லிப்போட்டு அங்க மைக்கை பிடிச்சிட்டு வாறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமாதிரி நிகழ்ச்சி நாளும் வந்திட்டுது.ப்ரோக்கிராம் லிஸ்டைப்பாத்தா எங்கட பாட்டு கிட்டத்தட்ட இரவு பத்துமணிக்குத்தான் வரும்போல கிடந்தது.சனத்தை தொடர்ந்து அரங்கத்தில வைச்சிறதுக்கு எப்பவும் இசைக்கச்சேரிய கடைசியாத்தான் வைக்கிறது வழக்கம்.ஆனா எனக்கு வயித்தக்கலக்க வெளிக்கிட்டுது. ப்ரோக்கிராமுக்கு இரவு வாறதுக்கு வீட்டில அப்பருக்கு எப்பிடி கையிறு விடுகிறது எண்டு தெரியேல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரோக்கிராம் நடந்த அதே நாளில மருதடிப்பிள்ளையார் கோயிலில மஞ்சத்திருவிழா வந்தது.அதைச்சாட்டி கொஞ்சம் லேட்டா வீட்டுக்குப்போனாலும் பத்துமணிக்கு தொடங்கிற நிகழ்ச்சிக்கு எப்பிடிப்போறது எண்டு எனக்குள்ள பெரிய சங்கடம்.ஏனெண்டா ஆமிப்பிரச்சினையால மிஞ்சி மிஞ்சிப்போனா ஒம்பது மணிக்குள்ள மஞ்சம் இழுத்து கோயிலே பூட்டிப்போடுவினம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி பூந்து விளையாடுவம் எண்டு போட்டு என்ர ‘இசையமைப்பளரிட்ட’ போய் என்ர பிரச்சினையச்சொன்னன்.பிள்ளையாருக்கு ஒரு பாட்டு இருக்கு.அதுக்கு அடுத்ததா உம்மடை பாட்டை போடுறன் எண்டு அவர் என்ர வயித்தில பாலை வார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி தொடங்கீட்டுது.மேடையில் இசைக்கலைஞர்களை அறிவிப்பாளர் அறிமுகப்படுத்தினார்.கன நேரம் எதிர்பாத்திருந்த சனம் கைதட்டி விசிலடிச்சு ஒரே ஆரவாரம்.மேடைக்கு பி;ன்னால நிக்கிற எனக்கு அப்பரிண்ட முகம்தான் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சரியெண்டு முதல்பாட்டு ‘பிள்ளையார் சுழிபோட்டு’ எண்டு பாட்டு தொடங்கிச்சுது.அப்ப ட்ரம்ஸ் வாசிச்சுக்கொண்டிருந்தவர் தேவையில்லாம ஓங்கி ஒரு அடிவிட்டார்.அவ்வளவுதான் ட்ரம்ஸ் வாசிச்ச குச்சி முறிஞ்சு ஒரு துண்டு முன்னால போய் விழுந்தது.பிறகென்ன சனமெல்லாம் “காய் கூய்” எண்டு கத்த ரெண்டொரு கல்லும் மேடைக்கு வந்திட்டிது.&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கமே அல்லோல ‘கல்’லோலம். பிள்ளையார் சுழிபோட்டு பாட்டுக்கு ட்ரம்ஸ் தேவையே இல்லை.ஆனா எங்கட ஆள் தேவையில்லாம படம் காட்டப்போய் எல்லாம் பிளைச்சுப்போச்சு.      &lt;br /&gt;கச்சேரிக்காறரோ என்ன செய்யிறது எண்டு தெரியாம முழுச வெளிக்கிட்டினம்.&lt;br /&gt;&lt;br /&gt;நானோ இது சரியான நேரம் எண்டுட்டு நைஸா பக்கத்து வீட்டில விட்ட சைக்கிளையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பறந்திட்டன்.வழியில படுத்துக்கிடந்த நாய்கள்வேற என்னை வேகமா வீட்டைகொண்டுபோய் விட்டுட்டுது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாள் கேள்விப்பட்டன்.வேற ட்ரம்ஸ் ஸ்டிக் இல்லாம பக்கத்து வீட்டில அகப்பை காம்பை வேண்டி ட்ரம்ஸ் அடிச்சு மிச்ச கச்சேரிய நடத்தி முடிச்சவயளாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111378898743188579?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111378898743188579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111378898743188579' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111378898743188579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111378898743188579'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/04/blog-post_18.html' title='பிள்ளையார்சுழியும் அகப்பைக்காம்பும்'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111346637098499477</id><published>2005-04-14T18:11:00.000+10:00</published><updated>2010-07-16T06:00:05.752+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தாயின்மடி எனை அழைக்குதடா!</title><content type='html'>புதுவருஷப்பிறப்பையும் கடைசியில மாலன் சிவகுமாரன் சண்டை மாதிரி தொடக்கி விடலாம் எண்டு வலைத்தளத்தில சிலபேர் ஆங்காங்கே தங்கட வெடியள வீசியிருக்கினம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு அதப்பற்றியெல்லாம் கவலை இல்லை.சண்டைபிடிக்கிற அளவுக்கு தகுதியும் இல்லை.இப்படியான விசேஷ நாட்களில ஊர்ஞாபகங்கள்தான் சின்னதா மனசில எட்டிப்பாத்து பழசுகளை நினைவுபடுத்துது.அதை நினைக்க சின்னதா ஒரு கவலை.&lt;br /&gt;&lt;br /&gt;புதுவருஷப்பிறப்பண்டுதான் மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா வாறது.கொழும்பில வேலையானாலும் தேருக்கு மருதடியில கரைவேட்டியோட ஆஜராகிறது என்ரவழக்கம்.அதுவும் அங்க வாற சனத்துக்கு ‘படம்’ காட்டிறதெண்டா அதில ஒரு தனிசுகம்.(இஞ்ச சனம் எண்டு நான் சொல்லிறது யாரயெண்டு உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன்.)&lt;br /&gt;&lt;br /&gt;மருதடியில தேரெண்டாலும் இதே நாளில மானிப்பாய் வேலக்கை பிள்ளையார் கோவில்,சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் கோயில் தேர்த்திருவிழாக்களும் சிலநேரம் வரும்.அதால,யாழ்ப்பாணம் வடமராட்சி அங்காலப்பக்கத்திலயிருந்தும் சனம் சாரிசாரியா வலிகாமத்தை நோக்கி படையெடுக்கும்.சனத்தோட யாவாரியளும் எக்கச்சக்கமா வருவினம். மருதடிப்பிள்ளையார் கோவிலுக்கு தெற்குப்பக்கமிருக்கிற வயல்வெளிமுழுக்க கடைதான்.பான்சிச்சாமான் கடையள்,கச்சான் கடையள்,தேன்முறுக்கு கடையள் முக்கியமா ஐஸ்கிரீம் கடையள் எண்டு வயலே தெரியாதமாதிரி காணிவேல் கணக்கில கடையள் நிறைஞ்சு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐஸ்கிரீம் கடையளுக்கு முன்னால நிண்டு அங்க வாற தங்கட வகுப்பு பெட்டையளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்து றிலேஷன் ஷிப்புக்கு அத்திவாரம் போடிறதெண்டா பெடியங்களுக்கு அண்டைக்கு பெரிய கொண்டாட்டம்.வகுப்பில ரெட்டைச்சடையோடயும் சட்டையோடயும் நெடுகலும் பாக்கிற பெட்டையள அண்டைக்கு பாவாடை சட்டையில அல்லது சாறியோட பாத்தவுடன பெடியளுக்கும் ஒரே புளுகம்;.அவையளுக்கு பின்னால போய் பகிடி விடுகிறதும் அப்பிடி பகிடிவிடுகிற பெடிப்பிள்ளையள பெட்டையளிண்ட தகப்பன்மார் முறைச்சுப்பாக்கிறதும் எண்டு திருவிழாக்கூட்டத்தில கன விளையாட்டுகளப்பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேநேரம் பெடியளிண்ட இந்தத் தொல்லை தாங்காமல் அவங்கள் வாங்கித்தாற ஐஸ்கிரீமை வாங்கி குடிக்கேக்க யாரும் பாத்தா என்ன நினைப்பினம் எண்ட பயத்தில தேரில சாமியப்பாத்த கையோட சைக்கிள் பார்க்கில சைக்கிளை எடுத்துக்கொண்டுபோய் வழியில உள்ள தண்ணீர்ப்பந்தலில சக்கரைத்தண்ணியோ அல்லது தோடம்பழத்தண்ணியோ குடிக்கிற பெட்டையள விடாம துரத்திற சில பெடியள் அவையிட்டையே கச்சானுக்கு காசு வாங்கிற வாடிக்கையையும் அங்க பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேநேரத்தில,கோயில் லவுட் ஸ்பீக்கரில அப்பப்ப- &lt;br /&gt;&lt;strong&gt;‘சாலினி என்ற சிறுமி தனது பெற்றோரை தவறவிட்டுவிட்டார்.அவரது பெற்றோர் எங்கிருந்தாலும் உடனடியாக காரியாலத்துக்கு வரவும்’&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘பக்தர் ஒருவரின் இரண்டுபவுண் சங்கிலி சனநெரிசலில் தொலைந்துவிட்டது. கண்டெடுத்தவர்கள் தயவுசெய்து காரியாலயத்தல் ஒப்படைக்கவும.; சன்மானம் வழங்கப்படும்’&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘ஆலயத்தின் வடக்கு வீதியில் நிறுத்தப்பட்டுள்ள கறுப்பு நிற 22-4576 அம்பாஸிடர் காரின் உரிமையாளர் காரியாலயத்துக்கு உடனடியாக அழைக்கப்படுகிறார்’&lt;/strong&gt;&lt;br /&gt;போன்ற அறிப்புக்கள் பக்தர்களை பரபரப்பாக்கிக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கட பொன்குஞ்சுகளை இறுகப்பிடித்த தாய்மார்,சால்வை நீக்கலுக்களால் தங்கட ஓம் பதித்த சங்கிலியை சிரமப்பட்டு காட்டும் இளைஞர்கூட்டம்,பக்கத்திலுள்ளவளிண்ட பதக்கத்த பார்வையால எடைபோட்டு மனசுக்குள்ள பெருமூச்சு விடுகிற பெண்கள்,வாங்கிக்குடுத்த பலூனை உடைச்சுப்போட்டு இன்னொண்டு கேட்டு அழும் பிள்ளை,பிரதட்டை அடிச்ச மண்ணை துடைக்கும் பஞ்சியில் திரியும் பெரிசுகள்,பறவைக்காவடியப்பாத்து வாய்பிளந்து நிற்கும் சிறுவட்டங்கள்,கேணிக்குள் தாமரைப்பூ பிடுங்க ஆயத்தமாக பாவாடைய இடுப்பில் சொருகிக்கொண்டு நிற்கும் சில வீரதீர சிறுமிகள்,அன்னதானத்துக்கு ஆயத்தமாக பெரிய பைகளுடன் மண்டபத்துக்கு முன்னால் வரிசையில நிக்கும் பிச்சைக்காரர்,ஆளுக்காள் அர்ச்சனைத்திருநீறைப்பூசி விடும் புதுமணத்தம்பதிகள் எண்டு பலதரப்பட்ட ஆக்களை கோயில் வீதியில காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட நினைவுகளை மூட்விடுகிற மருதடிப்பிள்ளையார் கோயிலில புனரமைப்பு வேலையள் நடக்குது.அதால இந்தமுறை திருவிழா நடக்கேல்ல.சும்மா பூசைமட்டும்தான் நடந்தது எண்டதை கேள்விப்பட்டவுடன எனக்குள்ள சுயநலமான ஒரு சந்தோஷம்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111346637098499477?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111346637098499477/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111346637098499477' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111346637098499477'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111346637098499477'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/04/blog-post_14.html' title='தாயின்மடி எனை அழைக்குதடா!'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111320154844334570</id><published>2005-04-11T16:35:00.000+10:00</published><updated>2010-07-16T06:00:05.753+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஹென்’ஸ் ஹஸ்பன்ட்</title><content type='html'>அமைதிப்படை எண்ட பேரில வந்து எங்கட ஊர்மனையளுக்குள்ள இந்தியன் ஆமி செய்திட்டுப்போன ஆக்கிரமங்கள் சொல்லி மாளாது.&lt;br /&gt;&lt;br /&gt;பொம்பிளையள கெடுத்ததும் ஆக்களப்பிடிச்சுக்கொண்டுபொய் அடிச்சதும் சுட்டதும் சனத்தை நிம்மதியா நித்திர கொள்ளவிடயில்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்புண்ணியவானுகளிண்ட அட்டூழியங்களில உதாரணத்துக்கு ஒண்டைச்சொல்லவேணுமெண்டா பள்ளிக்குடத்தில படிக்கிற பெடியன் ஒருத்தனப்பிடிச்சக்கொண்டு போய் சித்திரவதை செய்து மலவாசலால கொக்கோ கோல போத்தில உள்ளுக்கு இறுக்கிப்போட்டாங்கள்.பிறகு பள்ளிக்கூட பிறின்ஸிப்பள் கோரிக்கை விடுத்ததால பெடியன அப்பிடியே சோதின எழுத விட்டிருக்கிறாங்கள்.சோதினை மண்டபத்தில மயங்கி விழுந்த பெடியன ஆஸ்பத்திரிக்குக்கொண்டுபோய் எக்ஸ் ரே எடுத்துப்பாக்கேக்கதான்  உள்ளுக்க போத்தில் கிடந்தது தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாறல் சப்பாத்திய காம்ப்வளிய இருந்து திண்டு திண்டு தினவெடுத்துப்போய் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமில்ல.இப்ப ஈராக் சனம்போல அப்ப நாங்கள் எண்டு சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டநிண்ட இடங்களில ட்ரக்க நிப்பாட்டிப்போட்டு அதில நிண்டு செக்கிங் எண்ட பெயரில அதால போற வாற ஆக்கள இறக்கி ஏத்திறது அவயிண்ட பேமஸ் விளையாட்டு.அதில பெரிய பகிடி என்னெண்டா கேள்வி கேக்கிற அளவுக்கு அவயளுக்கு இங்கிலீஷ் தெரியாது பதில் சொல்லுற அளவுக்கு எங்கட ஆக்களுக்கு இங்கிலீஷ் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருக்கா ஆனைக்கோட்டைச்சந்தியில செக்கிங் நடக்கேக்க ஒரு ஆமி கேட்ட கேள்விக்கு விளக்கமா இங்கிலீஷில கதைச்ச இங்கிலீஷ் மாஸ்டரையே கனக்க கதைக்கிறார் எண்டு சந்தேகத்தில பிடிச்சுப்போட்டாங்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;வீடுகளில பூந்து அங்க இருக்கிற கோழியலப்பிடிச்சுக்கொண்டு போறது அவயளிண்ட முக்கிய ‘வேலை’யாக அப்ப இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடித்தான் தின்னவேலி பாம் ஸகூலுக்கு போய் அங்க கோழி பிடிக்கிறதுக்கு அனுமதி கேட்டிருக்கினம்.அங்க இருந்த அதிகாரியளும் பயத்தில ‘ஓம் ஓம் பிடியுங்கோ’ எண்டு விட்டிட்டினம்.கோழியல் கொஞ்சத்தை பிடிச்சுப்போட்டு பிறகும் &lt;strong&gt;‘ஹென் ஹென்’ &lt;/strong&gt;எண்டு அவயளிட்ட கேட்டிருக்கிறாங்கள். அங்க இருந்தாக்களும் என்னடாப்பா இவ்வளத்தையும் பிடிச்சுப்போட்டு திருப்பவும் ஹென் ஹென் எண்டிறான் எண்டுட்டு திரும்பவும் கோழிக்கூட்டக்காட்டிருக்கினம்.அதுக்கு அவன் &lt;strong&gt;‘நோ நோ ஹென்’ஸ் ஹஸ்பண்ட்’&lt;/strong&gt;எண்டிருக்கிறாங்கள்.அவயளுக்கும் ஒண்டும் விளங்காம முளிக்க அதால ஒரு சேவல் ஓட ‘தற் தற்’ எண்டு கத்த, அப்பதான் தெரிஞ்சுது இவன் சேவலைத்தான் “&lt;strong&gt;ஹென்’ஸ் ஹஸ்பண்ட்&lt;/strong&gt;” எண்டவனெண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அவயிண்ட இங்கிலீஷ் கதையில எனக்கு இன்னும் மறக்கேலாத சம்பவம் இதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111320154844334570?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111320154844334570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111320154844334570' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111320154844334570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111320154844334570'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/04/blog-post_11.html' title='ஹென்’ஸ் ஹஸ்பன்ட்'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111302227950548786</id><published>2005-04-09T14:51:00.000+10:00</published><updated>2010-07-16T06:00:05.753+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பொறுக்கிகள்</title><content type='html'>சின்னப்பிள்ளையள் முத்திர சேக்கிறது,சிப்பி சோகி சேக்கிறது மிஞ்சி மிஞ்சிப்போன உண்டியலில காசு சேக்கிறது எண்டு கேள்விப்பட்டிருப்பியள்.ஆனா எங்கட காலத்தல நாங்கள் அப்ப ரி.56 துவக்கிண்ட தோட்டா சேக்கிறது எண்டா வலு பேமஸ்.(அவ்வளவுக்கு அங்க மலிஞ்ச சமான் அது எண்டேக்க நினைச்சுப்பாருங்கோ எங்கட நிலைமைய)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா வீட்ட கொண்டுவந்தா துலைஞச்சுது&lt;strong&gt;.“உந்த கோதாரியள ஏனடா வீட்ட கொண்டாறனியள்.றோட்டிலேயே எறிஞ்சிட்டு வாங்கோவன்.வெடிக்க கிடிக்க போகுது”&lt;/strong&gt; எண்டு அம்மா கத்திற கத்தலில அதைச்சுட்டவனே சத்தம் கேட்டு வந்திடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வெற்றுத்தோட்டா சேத்தா பிறகென்ன பலதும் தரும் கற்பக தரு மாதி நாங்கள் அதை கன விளையாட்டுக்கு பாவிக்கிறது.ஆனால் சைக்கிள் சாவிக்கு கீற்றக் ஆகப் போடிறதும் பேனைக்குப்பின்னால் அடைஞ்சுவிடுறதும் அப்போது பேமஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;வகை தொகையா தோட்டாக்கள அள்ளினவ தங்க வீட்டு பூங்கண்டுகளுக்கு முன்னால வரிசையா நிலத்தில பதிச்சு அழகு பாப்பினம்.சிலபேர் தங்கட மாடுகளுக்கு மணி கட்ட அதப்பிரியோசனப்படுத்துவினம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கட ஆக்களுக்குத்தான் ஒரு சாமானக்காட்டினாப்போதுமே.பிறகென்ன.அதில ஒரு ஆராச்சியே நடத்திப்போடுவினம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீமெந்து தட்டுப்பாடா இருந்த காலத்தில சக்கரையச்சேத்து வீடு கட்ட கண்டுபிடிச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோல் தட்டுப்பாடான காலத்தில மோட்டச்சைக்கிளுக்கு மண்ணெண்ணை விட்டு பிறகு ரின்னரை ரியூப்பில விட்டு ஊதி ஊதி ஓடுறது.(இப்படி ஓடிப்போற ஆக்கள புதுசாப்பாக்கிறவயள் மனுசன் ஏதோ காத்தை ஊதித்தான் மோட்டச்சைக்கிள் ஓடுது எண்டு நினைப்பினம்)&lt;br /&gt;&lt;br /&gt;சோப்பு தட்டுப்பாடன காலத்தில பனங்காய்களி போட்டு உடுப்பு தோய்க்க கண்டுபிடிச்சது.(இப்படி தோச்சு காயப்போட்ட சில உடுப்புகளை கொடியில இருந்து மாடு தூக்கிக்கொண்டுபோன கதையளும் நிறைய இருக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;பேப்பர் தட்டுப்பாடான காலத்தில மட்டையிலயே முழுச்செய்திப்பத்திரிகையே வெளிவந்தது.(அதை பள்ளிக்கூடப்பிள்ளையள் பைல் கவரா பாவித்தவை)&lt;br /&gt;&lt;br /&gt;சீனி தட்டுப்பாடான காலத்தில சக்கரையோட தொட்டு தொட்டு குடிக்கபழகீனது.(வீட்டுக்கு விருந்தாளியள் வந்தா, வீட்டுக்காரர் ஸ்டைலா ஒரு ட்ரேயில தேத்தண்ணியும் மற்ற தட்டல அஞசாறு பனங்கட்டி துண்டுகளும் வப்பினம்.வந்தவருக்கும் விஷயம் தெரியும்தானே.பிறகென்ன ஒரு வாய் தேத்தண்ணி பிறகு பனங்கட்டியில ஒரு நக்கு.இப்படியே அதை குடிச்சுமுடிக்கிறதெண்டா ஏதோ காச்சலுக்கு குடிநீர் குடிச்சமாதிரி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி எத்தனையோ இன்னோரன்ன கண்டுபிடிப்புகளக்கண்டுபிடிச்ச எங்கட ஆக்களுக்கு வெற்றுத்தோட்டாவை குடுத்து என்ன செய்யவேணும் எண்டு சொல்லியே குடுக்கவேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடித்தான் ரி.56 துவக்கிண்ட வெற்றுத்தோட்டாவை பேனைக்கு பின்னால இறுக்கிப்போட்டு வகுப்புக்கு கொண்டு வந்தான் பள்ளிக்கூடத்தில எனக்கு பக்கத்தில இருந்த பெடியன்.அண்டைக்கு வகுப்பில பாடத்தில கேள்வி கேட்டு எல்லாருக்கும் சப்பல் அடி.இந்த தோட்டாக்காரனிட்ட கேள்வியக்கேட்ட வாத்தியார் அவண்ட மேசையில அவன்ட பேனையப்பாத்திட்டு தூரநிண்டே சரி சரி இரு எண்டுட்டு மனுசன் ஏதொ வெடிச்சிடும் எண்ட பயத்திலயோ தெரியாது அடிக்காமயே போயிட்டுது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111302227950548786?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111302227950548786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111302227950548786' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111302227950548786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111302227950548786'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/04/blog-post_09.html' title='பொறுக்கிகள்'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111285701546760701</id><published>2005-04-07T16:54:00.000+10:00</published><updated>2010-07-16T06:00:05.754+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நட்ராஜ் கொம்பாஸ்</title><content type='html'>சின்னவயசில பாகைமானி,வட்டாரி,15 சென்டிமீட்டர் அடிமட்டம்,முக்கோணம் எல்லாமுள்ள கொம்பாஸ் என்றால் அது ஏதோ அண்டப்பிரகண்டம் மாதிரி.அப்பாவிட்ட காசு கேக்கச்சொல்லி எந்தநேரமும் அம்மாவப்போட்டு நச்சரித்து வாங்கிறதுதான் அப்ப எங்கட பெரியசாதனை. ஏக்கனவே வேண்டித்தந்த கொம்பாஸை துலைக்கிறது அல்லது போட்டுநெளிச்சுப்போடிறது.பிறகு புதுசுக்கு வழம் பண்ணிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பில மற்றப்பெடியள் சிலபேர் கேம்பிரிட்ஜ்,ஓக்ஸ்போர்ட் எண்டு அப்பவே 150 ரூபா விலையான கொம்பாஸெல்லாம் கொண்டுவருவாங்கள்.சிலபேர் வெளிநாட்டால மாமா கொண்டு வந்தவர் சித்தப்பா அனுப்பினவர் எண்டு பிளாஸ்டிக் பெட்டியில புதுரகமான சமானெல்லாம் கொண்டுவருவாங்கள்.அவங்கள் கொண்டு வந்தாச்சரி.விடிய ஸ்கூலுக்கு போய் பிறேயருக்கு மணி அடிக்கிறவரைக்கும் அந்தக்கொம்பாஸ் பெட்டி கொண்டுவந்தவனைச்சுத்திநிண்டு கதைக்கிறது.அவன் அது எப்பிடி வந்தது என்ன விலைவரும் எண்டெல்லாம் போட்டுத்தாக்குவான். சுத்திவர நாங்கள் நிண்டு இலையான் பூராதகுறையா வாயைப்பிளந்துகொண்டு நிண்டு கதைகேக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத்தெரியும் வீட்ட கேட்டாலும் அப்படியான கொம்பாஸ் கிடைக்கப்போறேல்ல.அதிலும் பாக்க கிடைக்கிறதக்கேப்பம் எண்டுடுட்டுத்தான் நடராஜ் கொம்பாஸ{க்கு மனுப்போடுறது.அது இந்தியாவில இருந்து செய்துவாற சாமான்.என்ன அப்ப ஒரு 40 ரூபா வரும்.அத எப்பிடியாவது அம்மாவுக்குள்ளால அப்பாவுக்கு பிறசரக்குடுத்து வாங்கிப்போடுறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கினா பிறகென்ன.ஏதோ வானத்தில மிதக்கிற சந்தோஷம்.ரெண்டு மூண்டு நாளுக்கு இரவில கூட நேரமிருந்து படிப்பன்.விடிய எழும்பின உடன என்ர மேசயப்பொய் பாக்கிறது அதில கொம்பாஸ பாத்ததும் ஒரு சந்தோசம்.ரெண்டு மூண்டு நாளுக்கு ஸ்கூல் Bag ஐ கீழே போடுறதும் இல்ல.உள்ளுக்க கொம்பாஸ் இருக்கிறதால பூப்புபோல வைக்கிறது.&lt;br /&gt;அந்தக்கொம்பாஸில இருக்கிற 15 சென்டி மீட்டர் அடிமட்டம்.ஒருக்கா கீழ விழுந்தாலும் அதுண்ட ஆயுளுக்கு உத்தரவாதம் இல்ல.40 ரூபா சாமான்தானே விலக்கேத்த மாதிரி சாமான்.அப்ப புதுகொம்பாஸில இருக்கிற அடிமட்டம் அப்பிடி இப்பிடி உடைஞ்சுதோ…..சரி.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகென்ன அம்மாவுக்கு திருப்பவும் நச்சரிப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111285701546760701?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111285701546760701/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111285701546760701' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111285701546760701'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111285701546760701'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/04/blog-post_111285701546760701.html' title='நட்ராஜ் கொம்பாஸ்'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111279877371067264</id><published>2005-04-07T00:43:00.000+10:00</published><updated>2005-04-07T00:46:13.713+10:00</updated><title type='text'>தீவெட்டியால் பிடித்த காயங்கள்</title><content type='html'>எங்கட வீட்டுக்கு பின்னால இருக்கிற கோயிலில புதுவருஷப்பிறப்பண்டு தேர்த்திருவிழா வர்றதால அது சனங்கள் மத்தியில வி.ஐ.பி.அந்தஸ்த்தைப்பிடிச்சு வச்சிருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழாக்காலத்தில நாங்கள் இடக்கிடத்தான் வீட்டுக்கு வருவம்.மற்றும்படி குருக்கள் போன பிறகும் நாங்கள் அங்கதான்.அப்பா தேடி வந்தாறெண்டால் பின்வளவால பாஞ்சு வீட்ட ஓடிவந்துடுறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலகட்டத்தில் கோயில்மணிச்சத்தம் கேட்டாச்சரி.சீர்காழியின்ர பாட்டுபோட முதல் அப்பாவிண்ட சால்வையை வேட்டியாக சுத்திக்கொண்டு ஏதோ மணியகாரர் எண்ட நினப்பில கோயிலுக்கு ஓடிருவன்.இந்த ஓட்டம் என்னத்துக்கெண்டு கேக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;பேந்தென்ன.தீவெட்டி அல்லது குடையை முதல்ல எடுக்கிறதுக்குத்தான்.கொடிமரத்துப்பூசை முடிஞ்சாப்பிறகு அய்யர் ஆடிஆடி மிச்சவேலையள முடிக்க திருவிழாக்குருக்கள் வசந்த மண்டப்பூசையத்தொடங்குவார்.அப்பவே நான் தீவெட்டிக்குப்பக்கத்தில போய் நிண்டுடுவன் தற்சேலா எனக்கு முந்தி வந்த சுப்பர்மேன் யாராவது தீவெட்டிய புக் பண்ணீட்டானெண்டா நான் சாமிக்குப்பிடிக்கிற குடைப்பக்கம்.அதுவும் முருகனுக்கு பிடிக்கிற குடை பயங்கரப்பாரம்.அதால அதத்தூக்க விருப்பமில்லை.பிள்ளையாற்ற குடையெண்டா ஓ.கே.அதுவும் உள்வீதிமுழுக்க தூக்கிறதெண்டா அப்ப எனக்கு உலகசாதன.தெற்கு வீதியில சாமிவரேக்க சாமி தூக்கிற என்னிலும் உயரமான அண்ணமாரைப்பார்த்து பேந்திபேந்தி முழிக்கிறது.அப்பஅவயளுக்கு விளங்கும், பெடிய விட்டா சாமிக்கு மேல குடைய விழுத்திப்போடுவான் எண்டு பயத்தில வாங்கிதாங்கள் பிடிப்பினம்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவெட்டி அம்பிட்டா அந்தமாதிரி.கரைச்சலே இல்ல.உள்வீதி முழுக்க பிடிக்கிறது.இடைக்கிட பந்தத்தை சரிக்கச்சொல்லி எண்ணை விடுவினம்.பெரிய சனக்கூட்டத்துக்கு நடுவில நிண்டு இதுகள செய்யேக்க நாங்களும் ஏதோ பெரிசா செய்யிறம் எண்டு சனம் நினைக்கும் எண்டு எங்களுக்குள்ள ஒரு நினைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருக்கா இப்பிடித்தான் தீவெட்டி பிடிச்சுக்கொண்டிருக்கேக்க எங்கயோ ஏமலாந்திக்கொண்டு நடந்துகொண்டுபோய் கோயில் மணியகாரரிண்ட தலைய பந்தத்தால சுட்டுப்போட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகென்ன.அப்பர் கோயில்ல அபிஷேகம்.வீட்ட அரிச்சனை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111279877371067264?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111279877371067264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111279877371067264' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111279877371067264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111279877371067264'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/04/blog-post_07.html' title='&lt;strong&gt;தீவெட்டியால் பிடித்த காயங்கள்&lt;/strong&gt;'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111275899758250044</id><published>2005-04-06T13:41:00.000+10:00</published><updated>2010-07-16T06:00:05.754+10:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மிரண்டார் விஜய்!</title><content type='html'>கில்லி படவெற்றியை அடுத்து இலங்கைக்கு முதன்முதலாக வந்திருந்தார் விஜய்.தன் குடும்பத்துடன் ஹொலிடே இன் ஹொட்டேலில் சில நாட்கள் தங்கியிருந்து அவருக்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் பத்திரிகையாளர் சந்திப்பும் ஒன்று.அது ஹொலிடே இன் ஹொட்டேலிலேயே இன்னொரு தளத்தில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வரவழைக்கப்பட்ட சுமார் 25 பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்திப்பு ஆரம்பமாகி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விஜய் முன்னே நின்று பதிலளித்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாது ஒரு பத்தரிகையாளர் மைக்கை வாங்கி- &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'வணக்கம் விஜய் அவர்களே! இலங்கை எப்படியிருந்தாலும் உங்களுக்கு மாமியார் வீடுதான்.அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்றார். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்கேள்வியைக் கேட்டதும் விஜயின் முகத்தில் ஈ ஆடவில்லை.திகைத்துப்போய் நின்றார்.என்ன நடந்தது என்று எவருக்கும் புரியவில்லை.உடனே விஜய் குனிந்து அருகிலிருந்து விழா ஏற்பாட்டாளருடன் ஏதோ கேட்டார்.அதன்பிறகுதான் அவரது முகத்தில் மீண்டும் பழைய களை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மனையின் தாய் வீட்டை இலங்கையில் மாமி என்று அழைப்பது வழக்கம்.விஜயின் மனைவி இலங்கையை சேர்ந்தவர் என்பதால் விஜயிற்கு இலங்கை மாமியார் வீடு என்ற அர்த்தத்தில் பத்திரிகையாளர் கேள்வியை கேட்டிருந்தார்.ஆனால் தமிழ்நாட்டில் பொலீஸ் ஸ்டேஷனைத்தான் மாமியார் வீடு என்று கூறுவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அர்த்த முரண்பாடு புரியாமல் மிரண்டுபோன விஜய் விடயத்தை விளக்கமாகக் கூறியபின்னர்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“என்ன சார் இப்படி பயப்பிடுத்தி விட்டுட்டீங்க.” &lt;/strong&gt;என்றார் அப்பாவியாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111275899758250044?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111275899758250044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111275899758250044' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111275899758250044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111275899758250044'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/04/blog-post_111275899758250044.html' title='மிரண்டார் விஜய்!'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111244821477797226</id><published>2005-04-02T23:12:00.000+10:00</published><updated>2005-04-02T23:23:34.780+10:00</updated><title type='text'>நெஞ்சாங்கட்டை</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நெஞ்சை விட்டு அகலாத நெஞ்சாங்கட்டை...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;'நெஞ்சாங்கட்டை' என்ற சொல்லு பலருக்குத் தெரியுமோ தெரியவில்லை. அதுபற்றிய மனது மறக்க முடியாத ஒரு பதிவை இங்கு எழுத முன்னர் இந்தச்சொல்லு குறித்த ஒரு வியாக்கியானம். பலருக்கு இது தெரிந்திருக்கும் சிலருக்கு இந்த சொற்றொடர் புதியதாக இருக்கும். ஆகவே அது குறித்த ஒரு முத்தாய்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இறந்தவர்களின் சடலத்தை எரிக்கும்போது அந்தச் சடலத்தின் நெஞ்சுப்குதியில் ஒரு கனமான மரகட்டையை வைப்பதுண்டு. ஏனெனில் சடலம் எரியத்தொடங்கியதும் உயர்வெப்பநிலையில் எலும்புகள் முறுக்கேறி தம்பாட்டுக்கு வளைந்து நெளிந்து திமிறி சிலவேளை சடலம் எழும்பி உட்கார்ந்துவிடும் நிலைக்கே வந்துவிடும். இதற்காக பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் முறைதான் நெஞ்சாங்கட்டை. அடக்கம் செய்யப்படும் சடலத்துக்கு இந்த முறையெல்லம் பின்பற்றப்டுவதில்லை. எரிக்கப்படும் சடலத்திற்கு மாத்திரமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நடைமுறை எனக்கு தெரிந்திருந்தபோதும் - அதை பலமுறை சுடலைகளில் கண்டிருந்தபோதும் - அண்மையில் நெல்லியடியில் நான் பார்த்த சம்பவம் இன்னும் மனதில் இழையோடியவாறு உள்ளது. அது யாருடைய சடலமும் அல்ல சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஐ.நடேசனுடையதே. அந்த சம்பவத்தை முழுமையான பின்னணியுடன் இங்கு தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2005 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி காலை.&lt;br /&gt;வழமைபோல் அலுவலகம் சென்று அன்றைய பத்திரிகைகளை அசிக்கொண்டே வாய்க்கு தேனீர் கோப்பையால் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தேன். தொலைபேசி அழைப்போன்று.&lt;br /&gt;மறுமுனையில் “&lt;span style="color:#666600;"&gt;நடேசன் அண்ணையை சுடடுப்போட்டாங்களாம்!&lt;/span&gt;” என்றொரு குரல். இடி விழுந்தமாதிரி இருந்தது. என்னடா இது முதல் நாளும் எடுத்து தனது கட்டுரைவிஷயமாக கதைத்தவர். பதறியபடி&lt;br /&gt;“&lt;span style="color:#666600;"&gt;காயமோ அல்லது…..!”&lt;/span&gt; என்று இழுத்தேன்.&lt;br /&gt;“&lt;span style="color:#993300;"&gt;இல்ல அந்த இடத்திலேயே ஆள் சரி”&lt;/span&gt; என்று பதில். மட்டக்களப்பில் ஏதாவது நடந்தால் அடுத்த நிமிடம் தொடர்புகொண்டு செய்தியை அச்சொட்டாக தருபவர் நடேசன். அன்று அவரையே சுட்டுவிட்டதால் அந்த செய்தியை யாரிடம் கேட்பது என்று குழப்பம். ஒருவாறு செய்தி ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பின்னர், நானும் இன்னும் சில எமது அலுவலக பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலர்கள் என அனைவரும் அவரது இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளப் புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த அவருடைய சொந்தஇடமான நெல்லியடியில்தான் இறுதிக்கிரியைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சடலத்தை மட்டக்களப்பிலிருந்து ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவல்வதாக ஏற்பாடு. கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நெல்லியடிக்கு எடுத்தச்செல்லப்ட்டது. வன்னி மக்கள் சாரிசாரியாக வந்து அஞசலி செலுத்தினர். புலிகளின் அரசசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், நீதி நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பரா, கல்வித்துறைப் பொறுப்பாளர் இளங்குமரன் உட்பட புலிகளின் பல முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.&lt;br /&gt;நெல்லியடியில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் அங்குள்ள மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. உடலுக்குத் தீ வைத்த பின் அனைவரும் சுடலையை விட்டு வெளியேறி விட்டனர். வெட்டியானும் நானும் சில பத்திரிகையாளர்களும் அங்கு நின்று கொண்டிருந்தோம். அப்போது சிதையில் எரிந்துகொண்டிருந்த நடேசனின் இரண்டு கைகளும் திடீரென திமிறிக்கிளம்பின. அவை இரண்டும் எரிந்து உருகிக்கொண்டிருந்தன. எம்முடன் நின்றுகொண்டிருந்த புகைப்படப் பிடிப்பாளருக்கு இதை விட்டால் என்ன வேலை? உடனே அதைத் தனது கமராவால் சுட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அங்கு விசாரித்தபோது “சடலத்தின் நெஞ்சுக்கு குறுக்காக கட்டைவைப்பதே வழமை. ஆனால் நடேசனின் சடலத்துக்கு மாறி வைத்துவிட்டார்கள் போல கிடக்கு. அதுதான் கைகள் வெப்பமேறியவுடன் வெளியே கிளம்பியிருக்கின்றன” என்று அங்கு நின்றுகொண்டிருந்த பெரியவர் சொன்னார். ஆனால் வெட்டியானிடம் விசாரித்தபோது "நெஞ்சாங்கட்டையே வைக்கவில்லை இங்கு அது கட்டாயமில்லை.” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் நாம் வாகனத்தில் ஏறுவதற்காக நடந்து வரும்போது, நடேசன் பற்றிக்கதைத்துக்கொண்டு வந்த இன்னொரு பத்திரிகையாளர் “நடேசன் அண்ணா நெஞ்சுரம் மிக்கவர். அதுதான் அவருக்கு நெஞ்சாங்கட்டை வைக்கவில்லை. தான் இறந்தாலும் தனது எழுத்துக்களும் கைகளும் என்றும் எழுந்து நிற்கும் என்பதையே நடந்த சம்பவம் காட்டுகிறது.”  என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111244821477797226?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111244821477797226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111244821477797226' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111244821477797226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111244821477797226'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/04/blog-post.html' title='நெஞ்சாங்கட்டை'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111233572088360264</id><published>2005-04-01T16:03:00.000+10:00</published><updated>2005-04-01T16:08:40.886+10:00</updated><title type='text'>பத்திரிகையாளனின் பத்தி 2</title><content type='html'>இது 2000 ஆம் ஆண்டு ஜுலையில் நடைபெற்ற சம்பவம் ...&lt;br /&gt;&lt;br /&gt;கொக்குவில் நாச்சிமார் அம்மன் கோவிலிலிருந்து கலட்டிச்சந்திக்கு போகும் வீதியிலுள்ள பளுதூக்கும் பயிற்சி நிலையத்தில் பயிற்சி செய்துவிட்டு வீடு திரும்பிய சஞ்சீவன் என்ற யாழ் இந்துக்கல்லூரி மாணவன் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் மறித்து விசாரணை என்ற பெயரில் கூட்டிச்செல்லப்பட்டார்.அருகிலிருந்த வீதியொன்றினுள் இழுத்துச்சென்று அங்கு அவரை விசாரித்த இராணுவம் அவர் இடுப்பில் கட்டியிருந்த பட்டி குறித்து விசாரித்தது.அது பளுதூக்கும்போது தான் அணியப்பயன்படுத்துவதாக சஞ்சீவன் கூறியபோதும் அது குறித்து அசட்டைசெய்யாமல் இராணுவம் அவரை தாக்கியது.மூர்க்கமாக தாக்கிய வேகத்தில் மூர்ச்சையுற்று கீழே விழுந்த மாணவன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.அப்பகுதியால் அப்போது வந்த பாடசாலை அதிபர் ஒருவரும் இன்னொருவரும் சமபவத்தை நேரில் பார்த்த குற்றத்துக்காக படையினாhல் ஏற்றிச்செல்லப்பட்டு மிரட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்த சம்பவம் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலை வேலைக்கு நான் சென்றபோதுதான் எனக்கு விஷயம் தெரியவந்தது.சஞ்சீவனின் சடலம் இன்னும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் யாழ் ஆஸ்பத்திரிக்கே தற்போதுதான் கிடைத்துள்ளது என்றும் அலுவலகத்தில் தகவல் அடிபட்டது.&lt;br /&gt;அப்போது என்னுடைய ஆபத்பாந்தவராக இருந்தவர் பத்திரிகையாளர் நிமலராஜன்.(இவர்தான் பின்னர் குடாநாட்டில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஆவார்)உடனடியாக தொடர்ப்புகொண்டு விஷயத்தை கூற, விண் போல பாய்ந்து வந்து நாம் வழக்கமாக சந்திக்கும் சிவன்கோவிலுக்கு முன்புள்ள சண்முகம் கடையில் காத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'பொடி ஆஸ்பத்திரியில்தான் கிடக்குதாம்.அதைப் படமெடுத்தா பெடியனுக்கு ஆமி அடித்த அடியை சனத்துக்கு வடிவா படத்திலேயே போட்டுக்காட்டலாம்" என்ற யோசனையுடன் என்னையும் ஏற்றிக்கொண்டு ஆஸபத்திரிக்கு விரைந்தார் நிமலராஜன்.நேரே சவச்சாலைக்கு சென்றோம்.(இதே சவச்சாலைக்கு பின்னர் ஒருகாலத்தில் நான் நிமலராஜனின் சடலத்தை பார்க்கச்சென்றிருந்தேன் என்பது வேறு கதை.அதை இப்போதைக்கு விடுவம்)&lt;br /&gt;அங்கு வாசலில் பல மருத்துவபீட மாணவர்கள் குழுமி நின்று நடுவில் ஏதோ ஒன்றை வைத்து ஆராய்ந்தவண்ணமிருந்தனர்.நாங்கள் இருவரும் அவர்களுடன் சங்கமித்து எட்டிப்பார்த்தால் நடுவில் ஒரு இளைஞனின் சடலம்.அங்கு ஒருவரிடம் விசாரித்ததில் அதுதான் சஞ்சீவனின் சடலம் என்றும் அறியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகென்ன பேப்பருக்கு படம் கிடைக்கப்போகிறது என்று பெரும் சந்தோஷம்.சோதனையை முடித்துக்கொண்டு மாணவர்கள் வெளியேற,வாயிற்காவலருக்கு கருணை மனுக்கொடுத்து விட்டு ஆமி சுட்ட சடலத்தை நாங்கள் எமது கமராவால் சுட்டுக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தநேரம் பார்த்து பின்னால் கைதட்டி எம்மை ஒருவர் அழைத்தார்.திரும்பிப்பார்த்தால் அவர்தான் பிரேத பரிசோதனை அதிகாரி.அருகில் போனபோது எம்மை யார் எவர் என்று விசாரித்துவிட்டு அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டார்.நாங்கள் அடையாள அட்டையை காண்பித்தநேரம் பார்த்த அவற்றை பிடுங்கிக்கொண்டு நேரே ஆஸ்பத்திரி ஆணையாளரின் அறைக்குள் சென்றவர்.அரைமணிநேரமாக வெளியே வரவில்லை.நாங்களும் ஜாமீன் கைதிகள் போல வெளியே நின்று கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிதுநேரத்தின்பின்னர் வெளியே வந்தவர் உள்ளே வரும்படி அழைத்தார்.உள்ளே சென்ற எமக்கு உபதேசத்துடன்கூடிய ஒரு உத்தரவு.&lt;br /&gt;அதாவது அனுமதி இன்றி சவச்சாலைக்கு வந்தது தவறு என்றும் இனிமேல் வருவதாக இருந்தால் பத்திரிகையாளர்கள் அனுமதிபெற்றே வரவேண்டும் என்றும் கடும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ கமராவை பறி;க்கப்போகிறார்கள் படமெடுத்தது தெரிந்துவிட்டது என்று பதறியபடி இருந்த எமக்கு நடந்த சம்பவம் புஸ் என்றாகிவிட்டது.&lt;br /&gt;பிறகென்ன அடுத்தநாள் பத்திரிகையில் பிரசுரித்த அந்தப்படம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆதாரமாகும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கப்புறம் 2 மாதங்களாக நான் ஆஸபத்திரிப்பக்கம் போகவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111233572088360264?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111233572088360264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111233572088360264' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111233572088360264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111233572088360264'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/03/2_31.html' title='பத்திரிகையாளனின் பத்தி 2'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111226737823052557</id><published>2005-03-31T21:03:00.000+10:00</published><updated>2005-03-31T21:09:38.233+10:00</updated><title type='text'>முதலிரவு</title><content type='html'>முதலிரவு என்றதால்&lt;br /&gt;நெஞ்சில் படபடப்பு;&lt;br /&gt;கொஞ்சம் பரபரப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ பாதிநாட்களை&lt;br /&gt;படுக்கையில் கழித்த எனக்கு,&lt;br /&gt;அன்று ஏனோ&lt;br /&gt;அரை அவுன்ஸ் ஏக்கம்&lt;br /&gt;மனதில் மகுடி வாசித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கணைத்து -இருளின்&lt;br /&gt;விரல் பிடித்து ஏதோ&lt;br /&gt;போருக்கு போவது போல&lt;br /&gt;போர்வைக்குள் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாய்ந்த மாத்திரத்திலேயே&lt;br /&gt;காதுக்குள் அவள் சொன்ன&lt;br /&gt;சிருங்கார மொழியும்&lt;br /&gt;சிக்கன சிணுங்கலும்&lt;br /&gt;புரியாமல் தலையசைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாத அவள் பசிக்கு&lt;br /&gt;ஓவ்வாத ஜென்மமாக&lt;br /&gt;சுருண்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,&lt;br /&gt;அவளோ விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போர்வைக்குள் நீச்சலடித்தேன்;&lt;br /&gt;கைகளோ படபடத்தன;&lt;br /&gt;கால்களோ துடிதுடித்தன;&lt;br /&gt;என் கை நகங்களே&lt;br /&gt;என்னை பிராண்டின.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தளவு போராட்டம்&lt;br /&gt;விடிய விடிய நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போரின் உச்சத்தில்&lt;br /&gt;போர்வையே கிழிந்தும்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் பார்த்தபோது&lt;br /&gt;ஓரத்தில் சிறு ரத்தக்கறை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவிரசமான வர்ணனையா?&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடொன்றில்,&lt;br /&gt;நான் கழித்த முதலிரவில்,&lt;br /&gt;எனையழித்த நுளம்பின் தொல்லையை&lt;br /&gt;இதற்கு மேல் எப்படி சொல்ல?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111226737823052557?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111226737823052557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111226737823052557' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111226737823052557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111226737823052557'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/03/blog-post_31.html' title='முதலிரவு'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-111225168191701915</id><published>2005-03-31T16:39:00.000+10:00</published><updated>2005-03-31T16:48:01.920+10:00</updated><title type='text'>பத்திரிகையாளனின் பத்தி</title><content type='html'>வணக்கம்!&lt;br /&gt;இந்த இணையத்துக்கு இட்ட நாமம் ஆழிப்பேரலையின் அக்கிரமத்துக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை இத்தால் உறுதி செய்து கொண்டு என் மனதில் இன்னமும் நீங்காமல் காதல் செய்துகொண்டிருக்கும் ஒரு சில நினைவுகளுக்கும் எனக்கும் நடைபெற்ற மகரந்தச்சேர்க்கையில் உருவான மழலைகளை இங்கு இறக்கி விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலை நாட்களை முடித்துக்கொண்டு எவருமே (நானும் கூட) எதிர்பாராதவாறு பத்திரிகைத்துறைக்குள் நுழைந்த அந்த நாட்களில் இடம்பெற்ற பல சம்பவங்கள் ஏனோ தெரியவில்லை இன்னும் என் நெஞ்சில் கனதியாக இருந்துகொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2000 ஆம் ஆண்டு மே மாதம்.&lt;br /&gt;ஓயாத அலைகள் 3 சமர் மூலம் விடுதலைப்புலிகள் குடாநாட்டின் நுழைவாயிலுக்கு வந்து அரியாலையில் நின்றுகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.யாழ்ப்பாணத்தில் அகப்பட்ட இராணுவம் என்ன செய்வது என்று தெரியாமல் இனித்தான் ஏதோ வெட்டி விழுத்தப் போறவர்கள் போல நகர எல்லைக்குள்ளிலிருந்து மக்களை இடம்பெயர்ந்து செல்லுமாறு கூறிவிட்டது.வழக்கம்போல இன்னொரு இடப்பெயர்வுக்கு ஆயத்தமான யாழ் மக்கள் சாரி சாரியாக வலிகாமம் பிரதேசத்துக்குள் தஞ்சம் புகுந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குடாநாட்டின் வேலியில் சண்டை நடந்துகொண்டிருந்ததால் தகரத்தில் தேங்காய் விழுந்தது போல எறிகணை சத்தம் காதைக்கிழித்தது.எமக்கான அப்போதைய ஒரே செய்திவழியாக இருந்த வானொலியையே கேட்கமுடியாத அளவுக்கு எறிகணை சத்தம் ஒவ்வொன்றும் இடிபோல இருந்தது.(சிந்தித்து பாருங்கள் களத்தில் போராடியவர்களுக்கு எப்படியிருந்திருக்குமென்று)இதனால் பீதியடைந்த நாம் எமது ஆசிரியர் பீடத்தை மேல்தளத்திலிருந்து கீழ்தளத்துக்கொண்டு வந்தோம்.சுற்றிவர காகித மூட்டைகளை அடுக்கிவிட்டு நடுவிலே இரண்டு மூன்று மேசைகளைப்போட்டு அங்கிருந்து வேலை செய்தோம்.ஒரு எறிகணை வந்து விழுந்தால்கூட அத்தனையும் தூள் தூள்.ஆனால் அப்போதைக்கு அது எமக்கு திருப்தியான அரணாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஆபத்து வலயத்துக்குள் அலுவலகம் இருந்தபோதும் அபாயத்தை நேரடி அஞ்சல் செய்வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பணியாற்றினோம். வெளியில் ஊரடங்குச்சட்டமாதலால் அலுவலகத்துக்குள்ளேயே தொடர்ந்து நான்கு நாட்கள் வேலைச்சிறை.வழக்கமாக 15 பேர் பணி புரியும் ஆசிரியர் பீடத்தில் என்னுடன் சேர்த்து மூவர் மட்டுமே.இந்த விகிதாசாரத்தில் தான் ஏனைய துறைகளிலும்.ஆகவே அலுவலகம் பூராகவும் மொத்தம் 15 பேரளவில் மட்டுமே.பத்திரிகைகளை அதிகாலை பதித்த பின்னர் எமது அலுவலகப் பின்வளவினூடாகவும் சில குறுக்குப்பாதைகளினூடாகவும் அவற்றைக் கொண்டு செல்லும் எமது ‘ஹீரோக்கள்’ கலட்டி சந்தி அல்லது தட்டார் தெரு சந்தி ஆகியவற்றுக்கு அப்பால் எமது விநியோகஸ்தர்களிடம் சேர்ப்பித்துவிடுவார்கள்.அதற்கு அப்பால் அன்றைய புதினத்தை அறிய ஆவலுடன் இருக்கும் மக்கள் அந்த புதினத்தாள்களை தமது விதி அறிக்கை போல விழுந்தடித்து வாசிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு துணிகரப்பணியில் நாம் ஈடுபட்டு வந்தபோது அவ்வப்போது அப்பகுதியால் செல்லும் இராணுவ வாகனங்கள் தமக்கே உரிய பாணியில் எமது அலுவலகத்தையும் அதன் செயற்பாடுகளையும் நோட்டமிட்டுச்செல்வர்.&lt;br /&gt;இவ்வாறு எமது பணி தொடர்ந்துகொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி.மாலை 6.30 மணியிருக்கும்&lt;br /&gt;வாயிலில் நின்ற காவலாளி வந்து “அண்ண பொலிஸ் வந்திருக்குது.ஆசிரியரை வரட்டாம்” என்றான்.எம்முடன் அப்போதிருந்த ஆசிரியர் பேனையை மூடி வைத்துவிட்டு வாசலுக்கு சென்றார்.சிறிது நேரத்தில் எமது அலுவலகத்துக்கும் திபு திபு என்று சுமார் 50 பொலிஸ் இராணுவம் மற்றும் பலர் நுழைந்தார்கள்.அவசரகாலச்சட்டத்தின் கீழ் அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரசுர கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக காலவரையறையின்றி பத்திரிகை நிறுவனத்தை சீல் பண்ணப்போவதாக அவர்களில் வந்த மூத்த அதிகாரி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுடன் ஏற்கனவே வாசலில் வாக்குவாதப்பட்ட எமது ஆசிரியர் எதுவுமே செய்யமுடியாமல் பெற்ற பிள்ளையை கைது செய்ய வந்திருப்பவர்களை பார்ப்பது போல அந்த சீருடைக்காரர்களை பார்த்து செய்வதறியாமல் திகைத்துப்போய் நின்றார். அலுவலகத்துக்குள் புகுந்த பொலீஸார் நாம் எழுதிய கடதாசிகள் முதற்கொண்டு பேனா, வானொலி சகலதையும் தனித்தனி பைகளில் போட்டு அடைத்தார்கள்.எங்கள் எல்லோரையும் அலுவலத்தை விட்டு வெளியேறி வாசல் பக்கம் போகுமாறு கூறிவிட்டு அலுவலக கதவுகள் சகலதையும் அடைத்து சீல் இட்டார்கள்.ஈற்றில் வாயில் கதவையும் சீல் செய்து தமது வேலைகள் அனைவற்றையும் தாமே வீடியோ பதிவும் வெய்து கொண்டார்கள்.&lt;br /&gt;சுமார் எட்டு மணியளவில் உள்ளே நுழைந்தவர்கள் தமக்கு கிடைத்த உத்தரவுப்படி அனைத்தையும் கனகச்சிதமாக செய்துமுடித்துவிட்டு மூன்று மணி நேரத்தில் சென்று விட்டார்கள்.வாசலிலிருந்த மரத்துக்குக்கீழ் இரவு முழுவதுமிருந்த நாம்,விடிகாலையில் வீடு சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது அலுவலகத்திலிருந்து அன்றைய தினம் ஒரே ஒரு செய்திதான் மக்களுக்கு சென்றது. ஜனநாயகத்தின் குரல் வளையையே நெரிப்பது போல இடம்பெற்ற இந்த செயல் இன்றும் ஈழத்தமிழர் வரலாற்றில் அழியாத காலச்சுவடு.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு இழுத்து மூடப்பட்ட பத்திரிகை அலுவலகத்தை ஜுலை மாதமளவில் அரசு மீள இயங்க அனுமதித்தது.&lt;br /&gt;இன்னமும் நெஞ்சில் நிழலாடும் நினைவு.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்…&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-111225168191701915?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/111225168191701915/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=111225168191701915' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111225168191701915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/111225168191701915'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/03/blog-post.html' title='பத்திரிகையாளனின் பத்தி'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11052470.post-110925324176785072</id><published>2005-02-24T23:45:00.000+10:00</published><updated>2005-02-24T23:54:01.766+10:00</updated><title type='text'>அலையோசை பற்றி...</title><content type='html'>வணக்கம் அன்புள்ளங்களே!&lt;br /&gt;இது அலையோசையின் ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழிக் கரைகளை அலைதடவிப் போகும்-என்&lt;br /&gt;ஆழ்மனத்தின் ஓசைகள் இங்கு அலைபாயும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களே அலையோசையின் அழகு.&lt;br /&gt;நன்றி-அருணன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11052470-110925324176785072?l=alaiyosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alaiyosai.blogspot.com/feeds/110925324176785072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11052470&amp;postID=110925324176785072' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/110925324176785072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11052470/posts/default/110925324176785072'/><link rel='alternate' type='text/html' href='http://alaiyosai.blogspot.com/2005/02/blog-post.html' title='அலையோசை பற்றி...'/><author><name>மருதன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry></feed>
